ரோஸ்மேரியின் பெஸ்ட் நன்மை.. வீட்டிற்குள் பாசிட்டிவ் கொண்டுவரும் வாஸ்து செடி.. வாவ் ரோஸ்மேரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரோஸ்மேரியின் பயன்கள் அபாரம்.. கவனம் சிதறாத கூர்நோக்கும் திறன், மனத்தெளிவு போன்றவற்றை பெருக்க செய்து, மூளையின் அறிவாற்றலை உயர்த்த இந்த ரோஸ்மேரி உதவுகிறது.. ரோஸ்மேரி இலைகள் அஜீரணம், நினைவாற்றல், தோல் மற்றும் முடி பராமரிப்பு, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.. அதேசமயம், வாஸ்துவிலும் முக்கிய இடத்தை ரோஸ்மேரி பெற்றுள்ளது.. அந்தவகையில், ரோஸ்மேரி செடியை வீட்டில் வளர்க்கலாமா? வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த ரோஸ்மேரி, பித்தத்தின் உற்பத்தியை குறைக்க செய்கிறது.. ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் கார்னோசிக் அமிலம் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதில் நிறைந்துள்ளதால், உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க செய்கிறது..

ரோஸ்மேரியின் நன்மைகள்

உடல் வீக்கத்தை குறைக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.. அஜீரண பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது. இதிலுள்ள சேர்மங்கள் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை பெற்றிருப்பதால், கீல்வாதம் மற்றும் பிற அழற்சி நோய்களில் இருந்தும் நம்மை காக்க செய்கிறது.

வாஸ்து சாஸ்திரத்தில் செடிகளுக்கும் மரங்களுக்கும் முக்கிய பங்கு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.. அதில் இந்த ரோஸ்மேரிக்கும் இடமுள்ளது.. அந்தவகையில், இது ஒரு வாஸ்து மூலிகையாகும்.. ரோஸ்மேரியை வீட்டில் வளர்ப்பதால, நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் தூக்கத்தை மேம்படுத்துகிறது.

மன ரீதியான பிரச்சனைகள்

தவிர, உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை நீக்க இந்த செடி உதவுவதால், வீடுகளில் வளர்ப்பது நல்லது.. ஆனால், வாஸ்து சாஸ்திரப்படி இந்த செடியை தெற்கு திசையில் நடக்கூடாது என்பார்கள். தெற்கு திசையில் நட்டு வைத்தால், வீட்டிற்குள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே, ரோஸ்மேரி செடியை கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைப்பது நல்லது.

எப்போதுமே, ரோஸ்மேரியை வீட்டில் வைக்கும் போது, சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வைக்கவும். குறிப்பாக, வடிகட்டிய மண்ணில் வைக்க வேண்டும்.. அடிக்கடிதண்ணீர் ஊற்றக்கூடாது.. மண் காய்ந்த பிறகு, மட்டுமே தண்ணீர் ஊற்ற வேண்டும்.

பாசிடிவ் வைப்ரேஷன்

ரோஸ்மேரியை போன்றே, துளசி, மல்லிகை, துளசி, பவள மல்லி, வாடாமல்லி, கற்றாழை போன்ற செடிகளை வளர்த்தால் அதிர்ஷ்டம் வருவதாக நம்பப்படுகிறது.. இதில், துளசி செடியானது, வீட்டில் செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரக்கூடியதாகும்.. வெற்றிலை கொடி அதிர்ஷ்டம் தரக்கூடிய ஒரு தாவரமாக இருக்கிறது.

ஆனால், எளிதில் திரவத்தை வெளியிடும் செடிகளையும் வளர்க்க கூடாது.. வீட்டின் வாசலையே மறைக்கக்கூடிய பெரிய மரங்களை வளர்க்கக்கூடாது, இது நேர்மறை எண்ணங்கள் உள்நுழைவதை தடுத்துவிடலாம். அதேசமயம் வாஸ்துவுக்கு வளர்க்கப்படும் செடிகள் வாடிவிடக்கூடாது.. கருகிப்போன இலைகள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+