இலவசமாக ஏழைகளுக்கு மருத்துவம் பார்க்கும் செந்திலின் மகன்.. இதுதான் காரணமாமே.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: காமெடி நடிகராக பலருக்கும் பரிச்சயமான நடிகர் செந்திலுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகன் மணிகண்ட பிரபு தற்போது பல் மருத்துவராக இருக்கிறார்.
அவரைப் போலவே அவருடைய மனைவியும் பல் மருத்துவர் இவர்கள் இருவரும் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார்களாம்.

அது குறித்த செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே நேரத்தில் நடிகர் செந்திலின் மகன் மற்றும் மருமகளுடைய புகைப்படங்களும் தற்போது பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் நடிகர்களில் ஒருவர்தான் செந்தில். இப்போதும் எத்தனையோ காமெடி நடிகர்கள் புதிது புதிதாக நடிக்க தொடங்கி இருந்தாலும், கவுண்டமணி- செந்தில் காம்போ இப்போதும் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் அதிகமான திரைப்படங்களில் நடித்து வந்த செந்தில் இப்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இது இவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தது. அதனால் அதிகமான ரசிகர்கள் இவர் மீண்டும் சினிமாவில் களம் இறங்க வேண்டும் என்று தங்களுடைய ஆசைகளை கூறி வந்தனர்.
செந்தில் நடிகராக இருந்தாலும் அவர்களுடைய மகன் மருத்துவராக பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். அதே நேரத்தில் செந்திலுடைய குடும்பத்தில் யாருமே படித்தவர்கள் கிடையாதாம். முதல் முறையாக டாக்டருக்கு படித்தது செந்திலுடைய மகன் தானாம். அவர் டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரே ஒரு சினிமாவிலும் நடித்திருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகு எந்த சினிமாவிலும் அவர் நடிக்கவில்லையாம். தன்னுடைய படிப்பிலேயே முழு கவனத்தையும் செலுத்தி அடுத்தடுத்து அதில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறாராம்.
அப்போதுதான் ஜனனி என்ற பல் மருத்துவரை மணிகண்ட பிரபு காதலித்து இருக்கிறார். இவர்களுடைய காதலுக்கு இரண்டு வீட்டிலும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லையாம். ஆனால் மணிகண்ட பிரபு நடிக்க கிளம்பியதும் ஜனனிக்கு பயம் வந்திருக்கிறது. ஏனென்றால் ஜனனியின் அப்பா ஜனனியை ஒரு டாக்டருக்கு தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தாராம். ஆனால் பிறகு மணிகண்டன் டாக்டராகவே மாறியதும் இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் திருமணம் முடிந்ததாம்.
அதே நேரத்தில் நடிகர் செந்திலுக்கு பெண் குழந்தைகள் இல்லை என்பதால் ஜனனியையும் சரி அதே போல செந்திலின் இரண்டாவது மகனின் மனைவியையும் ரொம்பவே பாசமாக பார்த்துக் கொள்வார்களாம். ஆரம்பத்தில் ஜனனியிடம் செந்தில் பேசும்போது அமைதியாக இருப்பாராம். ஆனால் இப்போது இவர்கள்தான் அதிகமாக பேசி கொள்வார்களாம்.

அதே நேரத்தில் மணிகண்டன் மற்றும் ஜனனிக்கு பெண் குழந்தை பிறந்ததும் நடிகர் செந்தில் ரொம்பவே சந்தோஷப்பட்டாராம். எங்க அம்மாவே எனக்கு திரும்பவும் பேத்தியாக பிறந்து இருக்காங்க என்று சொல்லி மகிழ்ந்திருக்கிறார். இப்போதும் அந்த குழந்தையோடு அதிகமாக செல்லம் கொஞ்சி விளையாடிக் கொண்டிருப்பாராம்.
இந்த நிலையில் அப்பா ஆசைப்பட்டபடி நான் டாக்டராக மாறிவிட்டேன். அவர் ஆசைப்பட்ட மாதிரி பல ஏழைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து கொண்டிருக்கிறேன். அப்பா பல வருஷம் கழித்து இப்போது சினிமாவில் நடிக்க தொடங்கி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அவர் அதே எனர்ஜியோடு தான் இப்போதும் இருக்கிறார் என்று நடிகர் செந்தில் மகன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். தற்போது நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு மற்றும் அவருடைய மனைவி ஜனனிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
“ஏ.ஆர். ரஹ்மானுக்கே இந்த நிலைமை என்றால், எனக்கு..? ‘கருப்பு’ படத்தில் நடந்த அதிர்ச்சி அனுபவம்! நடிகை ஆனந்தி ஓபன்! -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications