சொல்ல முடியாத அளவிற்கு ஏமாற்றம்.. யாருக்கும் அந்த சூழ்நிலை வரக்கூடாது.. நடிகை மின்னல் தீபா எமோஷனல்
சென்னை: நடிகர் சரத்குமார் நடித்த மாயி திரைப்படத்தில் வடிவேலு பெண்பார்க்க செல்லும் மின்னல் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்த தீபா தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சினிமா மற்றும் சீரியல்களில் நடிகைகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியிருக்கிறார்.
ஒரு சில நடிகைகள் சில கேரக்டரில் நடித்தால் கூட பெரிய அளவில் அவர்களுக்கு பிரபலம் கிடைத்து விடுகிறது. அந்த வகையில் "வாம்மா மின்னல்" என்ற காட்சியில் மாயி திரைப்படத்தில் மின்னல் வேகத்தில் வந்து போன தீபா பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் அவருக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைக்கவில்லை.

அதனால் பல வருடங்களுக்கு பிறகு சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். அதிலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகிணி சீரியலில் வில்லி கேரக்டரில் தீபா நடித்திருந்தார். அதற்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, சமீபத்தில் முடிவுக்கு வந்த சுந்தரி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த சீரியலில் தீபாவிற்கு பாசிட்டிவ் கேரக்டர் தான். அதனால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு அதிகமான பாராட்டு கிடைத்து வந்தது. இந்த சீரியல் சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் சினிமா துறையில் பெண்கள் சந்திக்கும் கஷ்டங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் நடிகைகள் எல்லோருமே தங்களுடைய திறமையை காட்ட வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பிரச்சனையால் பலருக்கு உண்மையான திறமையை வெளிக்காட்ட முடியாத சூழ்நிலை இருக்கிறது. எல்லாவற்றிற்கும் அட்ஜஸ்மென்ட் செய்து போனால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்று சூழ்நிலை சினிமாவில் நான் சந்தித்ததால் எனக்கு அது வேண்டாம் என்று சின்னத்திரை பக்கம் வந்து விட்டேன்.

அதற்கு பிறகு எனக்கு அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் வந்தது. அதை நான் செய்து கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் சினிமாவில் இருக்கும் போது நம்மிடம் சொல்வது ஒன்று ஆனால் அங்கு செய்வது ஒன்றாக இருக்கும். நம்மிடம் ஒரு கேரக்டர் நீங்க தான் செய்யப் போறீங்க என்று கூப்பிடுவாங்க. நாம அதற்காக அங்கு போகும் போது நம்மிடம் சொல்லாமலே அந்த கேரக்டரில் வேறு ஒரு நபரை நடிக்க வைத்து விடுவார்கள். அது நமக்கு சூட்டிங் ஸ்பாட்டுக்கு போன பிறகுதான் தெரியும்.

சில நாட்களில் ஷூட்டிங் ரொம்ப தூரம் இருக்கும் இடத்திற்கு நாம கஷ்டப்பட்டு ட்ரெயினிலோ அல்லது பஸ்ஸிலோ போய் சேருவோம். ஆனால் அங்கு நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். இந்த மாதிரி நிலைமை எந்த நடிகைகளுக்கும் வரக்கூடாது என்று சொல்வேன். ஆனால் பல நடிகைகள் இதே சூழ்நிலையை அனுபவித்து இருப்பார்கள்.
சில படங்களை தியேட்டரில் பார்க்கும்போது இந்த கேரக்டரில் நாம நடித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நமக்கு தோன்றும். தியேட்டரில் நம்முடைய முகத்தை பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். ஆனால் சரியான வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை என்று அந்த பேட்டியில் தீபா உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications