Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக்பாஸ் வீட்டிற்குள் அக்ஷரா இருக்கும்போது அண்ணன் செய்த செயல்...உருகிப்போன அக்ஷரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த அக்ஷரா முதல் முதலாக தன் அண்ணனை பற்றி லைவில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Akshara reddy First live after Bigboss 5 - Video

    பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே அண்ணன் புராணம் தான் அடிக்கடி பாடிக்கொண்டிருந்தார் இப்போது கேட்கவா வேண்டும் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

    இன்ஸ்டாகிராமில் தரிசனம்

    இன்ஸ்டாகிராமில் தரிசனம்

    பிக்பாஸ் வீட்டில் புதுமுகமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து பல ரசிகர்களின் ஃபேன்ஸ் பேஜ்களில் வலம் வந்து கொண்டிருக்கும் அக்ஷரா ரெட்டி தற்போது பட்டிதொட்டியெலலாம் பிரபலமாகி வருகிறார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறி இருந்தாலும் இவருடைய ரசிகர்கள் இவரை தினமும் மிஸ் பண்ணி வருகின்றனர். அதனால் தற்போது இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்து வருகிறார்.

    குறையாத அண்ணன் பெருமை

    குறையாத அண்ணன் பெருமை

    பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அக்ஷரா ரெட்டியின் ரசிகர்கள் இவருக்கு அதிகமாக சமூக வலைத்தளத்தில் கமெண்டுகளை அனுப்பி கொண்டிருந்ததால் உருகிப்போன அக்ஷரா தன்னுடைய ரசிகர்களுக்காக பதில்களை அனுப்பி வருகிறார். இவர் தன்னுடைய அண்ணனை பற்றி லைவில் பேசியது வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் லைவ் கூட தெரியாத அளவில் இவ்ளோ பச்சை மண்ணாக இருக்கிறாரே என்று ரசிகர்கள் என்று பீல் பண்ணி வருகிறார்கள்.

    எல்லாம் அண்ணன் தயவு தான்

    எல்லாம் அண்ணன் தயவு தான்

    அக்ஷரா பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அவருடைய அண்ணனை தான் ரொம்பவும் மிஸ் பண்ணி கொண்டு இருந்தார் அதனால் தான் இவருடைய பெயரை நாமினெட் ஆகிவிட்டார் என்று சொன்னதும் ரொம்பவே சந்தோஷப்பட்டுருக்கிறார். தன்னுடைய அண்ணனை பார்க்கப்போகும் அந்த ஒரு தருணம் அவருக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டே இருந்ததாம். அக்ஷரா விற்காக காஸ்ட்யூம் அனுப்ப வேண்டும் என்று கடை கடையாக சென்று தேடி அழைந்துள்ளாராம். அடிக்கடி விதவதமான அலங்காரத்தோடு வலம் வந்ததற்கு தன்னுடைய அண்ணன் தான் காரணம் என்று அக்ஷரா கூறியுள்ளார்.

    கமெண்ட்களில் பாசமழை

    கமெண்ட்களில் பாசமழை

    அண்ணன் மீது பாசத்தைப் பொழியும் அக்ஷராவை ரசிகர்கள் வழக்கம் போல ஒரு சிலர் கலாய்த்து வந்தாலும் பலர் இருவருக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பலர் இதே போலவே எப்போதும் பாசமாக இருக்க வேண்டும் என்று ஆசீர்வாதங்களையும் வழங்கி வருகின்றனர். இந்த காலத்தில் இப்படி ஒரு உறவு கிடைப்பது அரிது அதனால் அண்ணனின் அன்பை எப்போதும் இழந்து விடாதீர்கள் என்று பலர் கமெண்ட் களில் பாசமழை பொழிந்து வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+