For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது ஒரு கேவலமான எண்ணம்... அபிஷேக் முகத்திரையை கிழித்த அண்ணாச்சி

Google Oneindia Tamil News

சென்னை: பாப்புலர் ஆக வேண்டும் என்பதற்காக அபிஷேக் செய்யும் செயல் கேவலமாக இருக்கிறது என்று அண்ணாச்சி கோபத்தோடு கூறியிருக்கிறார்.

ரசிகர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்று தற்போது அபிஷேக் செயல்களைப் பார்த்து பலர் காண்டாகி கூறிவருகின்றனர்.

 பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியா... வெட்கக்கேடாக இருப்பதாக கே.எஸ்.அழகிரி சீற்றம்..! பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியா... வெட்கக்கேடாக இருப்பதாக கே.எஸ்.அழகிரி சீற்றம்..!

கண்டெண்ட்க்காக ஒவ்வொரு ப்ரமோவிலும் இப்படியா சண்டை போடுவது போல காட்டுவார்கள் என்று பிக்பாஸ் எடிட்டர் டீமை நெட்டிசன்கள் ஒருபக்கம் வறுத்தெடுத்து வருகின்றனர்.

மூன்றாவது வாரம்

மூன்றாவது வாரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஐந்தாவது சீசன் 2 வாரம் முடிவடைந்து மூன்றாவது வாரத்தில் விரு விருப்பாக போய்க்கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் இந்த வீட்டில் இருந்த கலகலப்பு சத்தம் இப்போது சண்டை சச்சரவாக மாறியிருக்கிறது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய சுய கேரக்டரை காட்ட தொடங்கி விட்டார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்று தங்களுடைய திறமைகளை காட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் அபிஷேக் செய்யும் செயல்தான் நெட்டிசன்கள் மத்தியிலும் பிக்பாஸ் ரசிகர்களின் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எதையும் கண்டுக்குற ஆள் இல்லை

எதையும் கண்டுக்குற ஆள் இல்லை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே கேமரா தன்னை கவர் செய்ய வேண்டும் என்பதற்காக பிளான் பண்ணி அபிஷேக் ஒவ்வொரு செயல்களாக செய்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் பலர் இவர்மீது குற்றம் சாட்டி கொண்டிரக்கின்றனர். ஆனால்

நான் அதற்கெல்லாம் சளைத்தவரல்ல என்று இவர் தினமும் செய்யும் செயல்கள் வேற லெவல் இருந்து வருகிறது. ஒருபுறம் நெட்டிசன்கள் இவரை கலாய்தாலும் சக போட்டியாளர்கள் இவருக்கு இதுவரைக்கும் ஆதரவு கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது அங்கேயும் பிரச்சனை தொடங்கி இருக்கிறது.

வைரலாகும் பழைய வீடியோ

வைரலாகும் பழைய வீடியோ

நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து இவரிடம் கவனமாக தான் சக போட்டியாளர்கள் விளையாண்டு வருகின்றனர். இவருடைய ஸ்சாட்டர்ஜி பல போட்டியாளர்களுக்கு தெரிந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவே இல்லை என்று கூறியிருந்தாலும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி இதற்கு முன்பு இவர் பேசிய வீடியோக்களும் ஏற்கனவே பலர் பார்த்து இருந்தாலும் தற்போது அதிகமாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது. இதுவும் இவர்மீது பலருக்கும் வெறுப்பு வர காரணமாக இருந்து வருகிறது.

வெளிப்படையான பேச்சு

வெளிப்படையான பேச்சு

தற்போது ஒரு சில நாட்களாகவே ப்ரமோவில் அபிஷேக் முகமும் அவர் செய்யும் செயல்களும் தான் வந்து கொண்டிருக்கிறது. இது பலருக்கும் எரிச்சலாக இருந்து வருகிறது என்று கூறி வருகின்றனர். ஆனால் அதற்கு அபிஷேக் ஆமாம் ப்ரமோவில் வர வேண்டும் என்பதற்காகத்தான் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன் என்று வெளிப்படையாகக் கூறிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்டதும் அண்ணாச்சி, இந்த எண்ணம் கேவலமாக இருக்கிறது என்று முகத்துக்கு நேரே பட்டென்று பேசிவிட்டார். இதை பார்த்ததும் இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன் என்பது போல அபிஷேக் நடந்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் அண்ணாச்சிக்கு ஆதரவாகவும், அபிஷேக்கை மேலும் திட்டி வருகின்றனர்.

English summary
Abhishek has said that his fellow contestants fight from time to time to get into every promo and then compromise. This is what fans have already said, but the dhoom annachi he spoke about today is bitter and abhishek's intention is vile.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X