அன்னபூரணியின் உடலில் அரசு.. 7 உசுரு போச்சே, நித்யானந்தா எங்கே? மனித கடவுளை வேரறுப்போம்: யார் பாருங்க
சென்னை: பெண் சாமியார் அன்னபூரணியின் பொய், ஏமாற்றுத்தனத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மனித கடவுள்களை வேரறுப்போம்" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழ்வேந்தன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தன்னை தானே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் பிரபல பெண் சாமியார் அன்னபூரணியின் 3வது திருமணம் திருவண்ணாமலையில் சமீபத்தில் நடந்தது.

போஸ்டர்கள்: அன்னபூரணியை திருமணம் செய்துள்ள ரோகித், அவருடைய முன்னாள் கணவர் அரசுவின் புதிய பரிணாமம் என்று திருமணத்தில் ஒட்டப்பட்டிருந்த பேனரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், தங்களை அம்மை - அப்பர் என்று அழைக்க வேண்டும் என்றும் அறிவித்திருப்பதும், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், அன்னபூரணி பெண் சாமியார் குறித்து, Kingwoods News யூடியூப் சேனலுக்கு வழக்கறிஞர் தமிழ்வேந்தன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவரது சுருக்கம்தான் இது:
"அன்னபூரணி எத்தனை கல்யாணம் வேண்டுமானால் செய்யட்டும்.. அரசு விவகாரம் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கட்டும்.. ஆனால், தான்தான் கடவுள் என்று சொல்லக்கூடாது.. இந்த பொருளாதார சோர்ஸ் எங்கிருந்து வந்தது? கடவுள் பெயரை சொல்லி சம்பாதிப்பதுதான்.. நாம் அனைவரும் எளிய மனிதர்கள். எந்த சின்ன துன்பம் வந்தாலும் தாங்கி கொள்ள மாட்டோம். சாமி நம்மை காப்பாத்தும் என்று நம்புகிறவர்கள். இதைதான் இதுபோன்ற சாமியார்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்.
இன்னொரு திருமணம்: அரசு என்பவர் அன்னபூரணியின் உடம்பில் கூடு பாய்ந்திருக்கிறார்.. அரசு என் உடம்பில் இருப்பதாக அன்னப்பூரணியே சொல்கிறார்.. அப்பறம் எதுக்கு இன்னொரு திருமணம்? அரசை வைத்து இன்னொரு தெய்வீக குழந்தையை பெற்றுக் கொண்டிருக்கலாமே?
இங்கே கடவுள் இருக்கு என்பதற்கான ஆதாரமும் உண்டு.. கடவுள் இல்லை என்பற்கான ஆதாரமும் இருக்கு. ஆனால், எந்த மனிதனும் கடவுளாக முடியாது.. அன்னபூரணி சொல்லும் கடவுளுக்கான கற்பிதம் தவறானது. யாராக இருந்தாலும் குறைந்தபட்சம் தத்துவ ஞானியாக மாறலாமே தவிர, கடவுளாக முடியாது.
மார்க்கெட்டிங்: யார் கடவுள் என்றாலும், அங்கே போய் நிற்பதற்கு ஒரு கூட்டம் இங்கே இருக்கிறது.. கடவுள்களை நான் கொச்சைப்படுத்தவில்லை.. ஆனால், ஆனால், கடவுளுக்கான மார்க்கெட் மட்டும் இங்கே குறையவேயில்லை. இப்போதுதான் அன்னபூரணி வளர்ந்து வருகிறார். இப்போதைக்கு அவர் கைதாக முடியாது.. சிறிது காலத்துக்கு கவனமாகவே இருப்பார்.
நித்யானந்தாவுக்கு சொந்த ஊரான திருவண்ணாமலையிலும் ஒரு ஆசிரமம் இருக்கு.. 7 பேர் இப்போ மண்சரிவில் இறந்திருக்காங்க.. தன்னுடைய ஆசிரமம் சார்பில் உயிரிழந்த குடும்பத்துக்கு 1 லட்சம் தரலாமே? குறைந்தபட்சம் மனிதநேயம் கூட இல்லையே? கோயில் சொத்துக்கள் அனைத்துமே ஏழைகளுக்கானது என்று நினைத்தால், கோயிலில் பூட்டுக்களுக்கு அவசியமில்லை.
முகம்மது நபி: என்னை பொறுத்தவரையில் திருவள்ளுர்கூட கடவுள்தான். ஆனால், எந்த இடத்திலும் தன்னுடைய குறளை பின்பற்றும்படி சொல்லவேயில்லை.. குரான் எழுதிய முகம்மது நபி கடவுளாகத்தான் இருக்க முடியும்.. அந்த புத்தகத்தில் ஒரு மருத்துவம் உள்ளது. அதை படித்தவர்களுக்கு மட்டுமே அதை புரிந்து கொள்ள முடியும்.
அன்பையும், நம்பிக்கையையும் போதித்த ஏசுவும் கடவுள்தான். அன்னை தெரசாவும் கடவுள்தான். ஆனால், தெரசாவே கை, கால் செயலிழந்து இறந்தாங்க.. அவ்வளவு நல்லது செய்த தெரசாவுக்கு வியாதியா? நல்லது செய்பவர்களுக்கு, நல்லதே நடக்கும் என்று சொல்வதெல்லாம் பொய்தானே? அதனால், நம்முடைய இறப்புக்கும் வியாதிக்கும் எந்தவிதமான சம்மதமும் இல்லை.
வள்ளலார்: பயிருக்கும் உயிருண்டு என்று சொன்ன வள்ளலாரே, தன்னை கடவுள் என்று சொல்லிக் கொள்ளவில்லையே.. மனிதனுக்கு மனிதன் தன்னை கடவுளாக சொல்லி கொள்பவர் நிச்சயம் நல்லவராக இருக்கவே முடியாது. எனவே, அன்னபூரணியின் பொய், ஏமாற்றுத்தனத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மனித கடவுள்களை வேரறுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications