பழனிச்சாமியின் அட்வைஸ்..பாக்கியா கேட்ட கேள்வி..அவமானத்தில் ராதிகா.. கோபி எடுத்த முடிவு
சென்னை: பாக்கியாவிடம் ஏதாவது கேள்வி கேட்டு கேவலப்படுத்த வேண்டும் என்று ராதிகா நினைத்து கடைசியில் பாக்கியாவிடம் அவமானப்படுகிறார்.
கோபி மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து எழிலிடம் நலம் விசாரிக்கிறார்.
பாக்யாவுக்கு ஆதரவாக மீண்டும் பழனிச்சாமி அட்வைஸ் கொடுக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே மூன்றாம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் செல்வி மற்றும் பாக்கியா இருவரும் கேண்டினில் இருக்கின்றனர். அப்போது ராதிகா அங்கே வந்து பாக்யாவை எப்படி ஏதாவது கேள்வி கேட்டு வெறுப்பேற்றலாம் என யோசித்தப்படியே வருகிறார்.
ஆனால் ராதிகா கேட்கும் கேள்விகளுக்கு முன்கூட்டியே செல்வி பதில் அளித்து ஷாக் கொடுக்கிறார். நீங்க பஞ்சாயத்து கூட்ட வசதியா எதுவும் இங்க நடக்கல என்று சொல்ல, சாப்பாடு தான் சுமாரா இருக்குன்னு எனக்கு ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் வருது என ராதிகா சொல்ல, உடனே பாக்கியா இங்க பாருங்க சாப்பாட்டுல ஏதாவது குறை இருக்கா இங்கே எழுதி வைக்கலாம்னு ஒரு நோட்டு வச்சிருக்கேன். ஆனா இதுவரைக்கும் ஒருத்தர் கூட எந்த குறையும் எழுதி வைக்கல என நோட்டை எடுத்து காட்டுகிறார்.
அடுத்து செல்வி காபி குடிக்கிறீங்களா? என கேட்க எனக்கு அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை என்று ராதிகா சொல்ல, பாக்கியா நீங்க இருக்கிற வீட்ல உங்களுக்கு ருசியா சாப்பாடு கூட கிடைக்குதோ இல்லையோ? அவ்வளவு ஏன் ஒரு நல்ல காபி கிடைக்குதோ இல்லையோ இங்கே குடிச்சுக்கோங்க என்று சொல்ல, செல்வி உங்களுக்கு காபி வேணுமா வேணாமா என கேட்க, ஒன்னும் வேணாம் என கோபத்தோடு ராதிகா அங்கிருந்து கிளம்புகிறார்.

பிறகு கோபி தன்னுடைய நண்பனை வர வைத்து வீட்டில் நடந்த பிரச்சனைகளை சொல்லி போதையில் புலம்பி கொண்டிருக்கிறார். அவர் நீதானே இரண்டாவது கல்யாணம் பண்ணுன, அப்போ நீ இதை எல்லாம் அனுபவிச்சு தான் ஆகணும் என சொல்ல, நீ இப்படித்தான் சொல்லுவேன்னு தெரியும் உன்கிட்ட புலம்புறேன் பாரு என்று மேலும் புலம்பி கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு பாக்யா வர அங்கே பழனிச்சாமி தன்னுடைய தான் செய்த இனிப்பு பலகாரத்தை கொடுத்து பிறகு பாக்யாவிற்கு ஆறுதலாக பேசி அவருக்கு தன்னம்பிக்கை கொடுக்கிறார். அதே நேரத்தில் வீட்டில் ஜெனியும் எழிலும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி குடிபோதையில் வீட்டுக்கு வருகிறார். முதலில் எதுவும் பேசாமல் படி ஏற போக பிறகு சோபாவில் வந்து உட்கார்ந்தபடி ஜெனியிடம் நலம் விசாரிக்கிறார்.
ஜெனி எந்த பதிலும் சொல்லாமல் இருக்க எழிலிடம் அவருடைய வேலையை பற்றி பேச எழில் பதில் எதுவும் பேசாமல் எழுந்து சென்று விடுகிறார். இந்த நேரத்தில் பாக்யா வீட்டிற்கு சுடிதாரில் வருவதை பார்த்து கோபி குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications