நான் ஏமாந்துட்டேன்..எதிர்பார்ப்பு..!விலகல் குறித்து கோபி கொடுத்த விளக்கம்..இதுதான் காரணமா?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் சதீஷ், கோபி கேரக்டரில் நடித்து வருகிறார்.
நேற்று தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள் நான் ரொம்பவே ஏமாற்றம் அடைந்து விட்டேன் என உருக்கமாக பல தகவல்களை பேசி இருக்கிறார் அதை விரிவாக பார்ப்போம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியில் தனி வரவேற்பு பெற்று இருக்கிறது. அதனாலையே இந்த சீரியல் விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் கோபியாக இப்ப வரைக்கும் நடித்து வரும் சதீஷ் திடீரென்று தான் விலகப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
ஏற்கனவே சதீஷ் இந்த சீரியல் குறித்தும் இனிவரும் எபிசோடுகள் குறித்தும் அடிக்கடி அப்டேட் கொடுத்து கொண்டிருப்பார். இந்த நிலையில் திடீரென்று இவர் வெளியிட்ட வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இவர் இந்த சீரியலில் நெகடிவ் கேரக்டரில் நடித்து வந்தாலும் அதிகமான ரசிகர்கள் பாராட்டி வந்தனர். தற்போதைய சூழ்நிலையில் பலரும் இதே மாதிரி முடிவு எடுக்கக் கூடாது என்பதை இவர் வலியுறுத்தி பல நேரங்களில் வீடியோக்களும் வெளியிட்டு இருக்கிறார்.
தொடர்ந்து தனக்கு இந்த சீரியலின் மூலமாக அதிகமான ஆதரவு கிடைத்து வருவதாகவும் அடிக்கடி சதீஷ் வீடியோவில் பேசிக் கொண்டிருப்பார். இந்த நிலையில் தான் எதனால் வெளியேறுகிறேன் என்பதை நேற்றைய வீடியோவில் கூறவில்லை இந்த நிலையில் இன்றைய வீடியோவில் வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் வந்தால் ரொம்ப கஷ்டம். அது ஏமாற்றத்தில் தான் முடியும்
என்று கூறியிருக்கிறார்.

அதைவிட ஒரு பெட்டர் விஷயம் நான் நேற்று கத்துக் கொண்டேன். நேற்றைக்கு வரைக்கும் நான் நிறைய படிச்சு பெரிய புத்திசாலி, மேதாவி உலகத்தையே மாத்தலாம் என்றெல்லாம் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா அது எல்லாம் இல்லை நான் ஒரு முட்டாள் அதை நான் தெரிஞ்சுகிட்டேன். இப்போ நான் ஒரு அறிவாளி, இப்போ என்னை பற்றி தெரிந்துகொண்டு என்னை நான் மாத்தி விட்டேன்.
உலகத்தை மாற்ற முடியாது ஆனால் நம்மள பாதுகாத்துக் கொள்ள முடியும். நம்மளை மாத்திக்க முடியும் அதை மட்டும் தான் நம்மளால முடியும். அதை நான் செய்கிறேன். முயற்சி திரு வினையாக்கும் என்று கூறி இருக்கிறார். இதைக் குறித்து அதிகமான ரசிகர்கள் உங்களுக்கு டெலிவிஷன் விருது கிடைக்கவில்லையா? அதற்காகத்தான் நீங்கள் சீரியலை விட்டு விலகுகிறீர்களா? இதுதான் காரணம் என்றால், தயவு செய்து அதை செய்ய வேண்டாம். நீங்கள் சிறப்பாக செய்கிறீர்கள். பதிலுக்கு எதையும் எதிர்பாராதீர்கள் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications