அமிர்தா வீட்டில் பாக்யாவிற்கு கிடைத்த ஏமாற்றம்.. ஈஸ்வரியின் சூழ்ச்சியால் எழிலுக்கு வரும் பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா அமிர்தாவின் வீட்டிற்கு சென்று எழிலுக்காக பேசுவதற்காக அமிர்தா வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கே வீடு பூட்டி இருக்கிறது.

செழியன் மற்றும் ஈஸ்வரி இருவரும் வர்ஷினியின் வீட்டிற்கு அவருடைய அப்பாவை சந்திக்க சென்றிருக்கின்றனர்.

செழியன் மற்றும் ஈஸ்வரி இருவரும் ரகசியமாக செய்யும் வேலை என்ன என்று ஜெனிக்கு சந்தேகம் தோன்றியிருக்கிறது.

பொய் காரணங்கள்

பொய் காரணங்கள்

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் எழில் மற்றும் பாக்யா இருவரும் அமிர்தாவின் வீட்டிற்கு செல்வதற்காக எழிலின் பிரண்டோட பாட்டி இறந்து விட்டதாக பொய் சொல்லி கிளம்புகின்றனர். இவர்கள் வெளியே சென்றதும் செழியன் மற்றும் ஈஸ்வரி கோயிலுக்கு செல்வதாக பொய் சொல்லி விட்டு வர்ஷினி வீட்டுக்கு செல்கின்றனர். செழியன் மற்றும் ஈஸ்வரி இருவரும் ரகசியமாக பேசுவதை கேட்டு ஜெனி மற்றும் செல்விக்கு இருவருக்கும் சந்தேகம் தோன்றுகிறது.

கதறி அழும் எழில்

கதறி அழும் எழில்

அடுத்ததாக பாக்யா மற்றும் எழில் இருவரும் அமிர்தா வீட்டிற்கு வரும்போது அங்கே வீடு பூட்டி இருக்கிறது. அதைப்பற்றி பக்கத்தில் விசாரிக்க அவர்கள் இருவரும் ஊருக்கு சென்று விட்டதாக சொல்கின்றனர். இதை கேட்டு எழில் அதிர்ச்சி அடைகிறார். என்னுடைய காதல் அவ்வளவுதானா என கதறி அழ பாக்யா அவரை சமாதானம் செய்கிறார். நம்மிடம் போன் நம்பர் இருக்கிறது. நாம் போன் செய்து பார்க்கலாம் நீ மனசை போட்டு குழப்பிக்காத என எழிலுக்கு ஆறுதல் கூறிவிட்டு எழிலை அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

வர்ஷினியின் அப்பா சம்மதம்

வர்ஷினியின் அப்பா சம்மதம்

அதே நேரத்தில் செழியன் மற்றும் ஈஸ்வரி வர்ஷினியின் வீட்டுக்கு செல்கின்றனர். அங்கே வர்ஷினியின் அப்பாவிடம் பேச அவர் என் பொண்ணு எது கேட்டாலும் மறுப்பு சொல்ல மாட்டேன். இதில் நல்ல பையன் என்பதால் தான் நான் இன்னும் சொல்லல ஆனா எழிலுக்கு இதில் சம்மதம்தானா என கேட்க அதெல்லாம் அவன் சம்மதிப்பான். எங்க குடும்பத்தோட வந்து பொண்ணு கேட்கிறோம் என்று கூறியபடியே தன் குடும்பத்தை பற்றி விலாவாரியாக ஈஸ்வரி எடுத்துக் கூறுகிறார். அப்போது கோபியை பற்றி பேசபோக வர்ஷினி தடுக்கவே அவர் பிசினஸ் பண்ணுவதாக கூறி முடித்து விடுகிறார்.

நம்ப மறுக்கும் பாக்கியா

நம்ப மறுக்கும் பாக்கியா

பின்பு பாக்கியா வீட்டிற்கு வந்ததும் எழில் நான் வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று கூற, பாக்யா பயந்தபடியே வீட்டிற்கு வா என்று அழைக்கும் போது இல்லை என எழில் மறுக்க பார்த்து போய்விட்டு வா என கூறி அனுப்பி வைக்கிறார். பின்பு பாக்யாவிடம் உன் மாமியார் ஏதோ சதி திட்டம் போடுறாங்க என்று செல்வி சொல்ல ஜெனியும் ,பாட்டியும் செழியனும் ஏதோ ரகசியமாக பேசுகிறார்கள் என்று சொல்ல, அதை பாக்யா நம்ப மறுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+