பாக்கியாவின் வீட்டிற்குள் கெத்தாக வரும் ராதிகா.. ஆதரவாக மாறிய ஈஸ்வரி.. இனி நடக்கப்போவது இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியின் வளைகாப்பு ஃபங்ஷனுக்கு கோபி ராதிகாவோடு பாக்கியா வீட்டிற்கு வருகிறார்.

கோபியின் மீது கோபத்தில் அவருடைய அப்பா கோபியை அடிக்கப் போகிறார்.

ஈஸ்வரி ராமமூர்த்தியை தடுத்து நிறுத்தி விடுகிறார்.

ஐந்தாவது மாத பங்க்ஷன்

ஐந்தாவது மாத பங்க்ஷன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டை ஆரம்பத்தில் ஜெனிக்கு ஐந்தாவது மாத பூ முடிக்கும் பங்க்ஷன் நடத்த ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்து மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கிறது. அப்போது ஜெனியின் அம்மா தன்னுடைய உறவினர்களுடன் ஜெனி வீட்டிற்கு வருகிறார். பாட்டி ஜெனி இடம் பங்ஷனை தொடங்கலாமா? எனக் கேட்க அப்போது ஜெனியின் அம்மா பங்க்ஷன் எல்லாம் பெருசா ஒன்னும் இல்ல, சின்ன பிரேயர் தான் பாதர் வந்துகிட்டு இருக்காரு என சொல்லுகிறார்.

ஃபங்சனுக்கு கிளம்பும் இனியா

ஃபங்சனுக்கு கிளம்பும் இனியா

இனியா ராதிகா வீட்டில் இருந்து ஃபங்ஷனுக்கு கிளம்பி கோபி இடம் பங்க்ஷனுக்கு போவதாக சொல்ல, கோபி அங்கே போயிட்டு திரும்பி வந்து விடுவியா? அங்கே மனசு மாறி இருந்திட மாட்டாளா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு இனியா நான் கண்டிப்பாக வந்து விடுவேன் என்று சொன்னதும் கோபி ராதிகாவை அழைத்து பங்ஷனுக்கு போகலாம் வா என கூப்பிட, ராதிகா நான் அங்கே வரவில்லை என சொல்கிறார். பின்பு கோபி ராதிகாவை பல்வேறு காரணங்களை கூறி வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறார்.

உறவினரின் கேள்வி

உறவினரின் கேள்வி

பாக்யாவின் வீட்டில் ஜெனி ஃபங்ஷனுக்கு வந்த அவருடைய உறவினர் ஜெனியின் மாமனார் எங்கே என்று கேட்க, அனைவரும் திணறுகின்றனர். பின்பு அவர் வேலை விஷயமாக வெளியே சென்று இருக்கிறார் என்று கூறுகின்றனர் பின்பு சிறிது நேரம் கழித்து ஜெனிக்கு நலங்கு வைத்து வளையல் போடும் வேலைகள் நடந்து முடிந்து குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க அப்போது இனியா அங்கே வருகிறார். இனியா வந்ததும் ஜெனி சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஜெனியின் உறவினர் இது மாப்பிள்ளையின் தங்கச்சி தானே இவர் எங்கே போயிருந்தார் என கேட்டுக் கொண்டிருக்க அப்போது கோபி ராதிகாவோடு உள்ளே வருகிறார்.

அடிக்கப் பாய்ந்த அப்பா

அடிக்கப் பாய்ந்த அப்பா

கோபியை ராதிகாவோடு பார்த்த ஜெனியின் உறவினர் ஜெனியின் மாமனார் ஊருக்கு போயிருக்கிறார் என்று சொன்னீர்கள்? இவர் இங்கே வந்து நிற்கிறார். கூட வந்திருக்கும் பெண் யார் என்று கேட்க, கோபி என்னுடைய மனைவி ராதிகா என சொல்ல அனைவரும் அதிர்ச்சியடையனர். ராமமூர்த்தி கோபப்பட்டு கோபியை அடிக்க போக ஈஸ்வரி அவரை தடுத்து நிறுத்தி வேண்டாம். ஜெனி ஓட சொந்தக்காரங்க இருக்காங்க என கூறுகிறார். கோபி நான் பாக்கியாவை தான் டைவர்ஸ் செய்து இருக்கிறேன்.என்னுடைய குழந்தைகளை அல்ல அதனால் என்னுடன் குழந்தைகளுக்கு பங்க்ஷன் நடக்கும் போது நான் கண்டிப்பாக வருவேன் என்று கூறுகிறார்

அதிர்ச்சி கொடுத்த கோபி

அதிர்ச்சி கொடுத்த கோபி

பிறகு செழியன் ஜெனிக்கு கோபி வாழ்த்து சொல்லி விட்டு ஃபங்ஷன் நல்லபடியாக முடிந்ததா? என கேட்க செழியன் ஆல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சு, நீங்க வாங்க என சொல்லி ஜெனியை அழைத்து வந்து நலங்கு வைக்க சேரில் உட்கார வைக்கிறார். அடுத்த கோபி ராதிகாவை நலங்கு வைக்க அழைக்க அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். இத்துடன் என்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+