மீண்டும் பழையப்படி திரும்பிய பாரதி..கடைசியில் இப்படி ஆகிவிட்டது.. பாரதிகண்ணம்மாவில் புது ட்விஸ்ட்
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த புது திருப்பம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
ஒரு பக்கம் இது தானா?? என்று சலிப்பு தட்டி விட்டது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

வருடங்களை கடந்த சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் பல எபிசோடுகளை கடந்து வருடக் கணக்கை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் டிஆர்பி சீரியலுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதனால் இதில் இருக்கும் ஒரு ட்விஸ்ட் உடைத்து விடாமல் பல வருடங்களை கடந்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஒரு டிஎன்ஏ டெஸ்ட்டில் முடிந்துவிடும் விஷயத்தை பல வருடங்களாக இழுத்துக் கொண்டு இருப்பதை பார்க்கும் போது ரசிகர்கள் பலருக்கும் வெறுப்பாக இருந்தாலும் கதைக்களம் ரசிகர்கள் விரும்பும் வகையில் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
தற்போது கூட பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் விவகாரத்திற்காக கோர்ட்டில் அணுகி இருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் ஆறு மாதங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறியதால் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில கண்ணம்மா தப்பு செய்யவில்லை என்று ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் பாரதிக்கு ஒவ்வொரு செயல்களும் உணர்த்திக் கொண்டிருக்கிறது. இதனால் பாரதி திருந்தி விடுவாரா?? கண்ணம்மாவை ஏற்றுக் கொள்வாரா?? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

பாரதியின் சஸ்பென்ஸ் கேள்வி
இந்த நிலையில் இந்த வாரத்தில் ப்ரமோக்களில் பாரதி தான் உன்னோடு மீண்டும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ தொடங்க இருக்கிறேன்.. ஆனால் அதற்காக ஒன்று செய்ய வேண்டுமென்று சஸ்பெண்ட் கொடுத்திருந்தார். அதற்கான விடை என்ன என்பது இன்று இரவு எபிசோடில் தெரியும் அது லட்சுமி அதாவது கண்ணம்மாவின் மகள் தனக்கும் கண்ணமாவிருக்கும் பிறந்த குழந்தை இல்லை என்று மட்டும் நீ ஒத்துக்கொள்ளவேண்டும். அப்படி உன்னுடைய தவறை நீ ஒத்துக் கொண்டால் நான் உன்னோட கடந்த கால கசப்புகளை மறந்து மீண்டும் சந்தோஷமாக வாழ்க்கையை தொடங்குகிறேன். லட்சுமியையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்டதும் கண்ணம்மா என்ன சொல்லப்போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் கண்ணம்மா கையெடுத்துக் கும்பிட்டு விட்டு கோபத்தோடு வீட்டைவிட்டு கிளம்புகிறார்.

வழக்கமாக நடைபெறுவது தான்
கண்ணம்மா வீட்டை விட்டு கிளம்பும் போது வழக்கமாக நடைபெறுவதாக இருந்தாலும் தற்போது வழக்கம் போல வீட்டில் உள்ள அனைவரும் வந்து கண்ணம்மாவை தடுத்து நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்களின் கையை உதறிவிட்டு கண்ணம்மா கோபத்தோடு வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால் அனைவரும் பாரதியை வழக்கம்போல குறைகூறி வருகின்றனர். ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த எபிசோடு இப்படி மாறிவிட்டது என்பது பலருக்கும் சலிப்பாக இருக்கிறது என்று கூறிவருகின்றனர். இன்னும் தெளிவாக காரணத்தை கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications