"பாரதிராஜா இல்லையென்றால் நாங்களே இல்லை!" குடும்பத்திற்குள் பிரச்சனை.. கங்கை அமரன் வருத்தம்
சென்னை:தமிழ் சினிமாவின் மண்வாசனை மாறாத அடையாளமாக வாழ்ந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு, அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல், அவருடன் வாழ்நாள் முழுவதும் பயணித்த நண்பர்கள் மற்றும் கலைஞர்களையும் சோகத்தின் உச்சிக்கே தள்ளியுள்ளது. குறிப்பாக, பல தசாப்தங்களாக அவருடன் உயிர் நட்பில் இருந்த இசைஞானி இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆகியோரின் வேதனை ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.
பாரதிராஜாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த கங்கை அமரன், செய்தியாளர்களிடம் பேசும்போதே உணர்ச்சிவசப்பட்டார். "பாரதிராஜா இல்லை என்றால் நான் இல்லை... இளையராஜா இல்லை... நாங்கள் யாருமே இல்லை" என்று அவர் கூறிய வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தின.

கங்கை அமரன் பேச்சு
தொடர்ந்து பேசிய கங்கை அமரன், "எங்கள் ஊரிலிருந்து முதலில் சினிமாவுக்காக வெளியே வந்தவர் பாரதிராஜாதான். அவர் சென்னைக்கு வந்து போராடினார். அதன் பிறகுதான் நாங்களும் வந்தோம். அந்த காலத்தில் எங்களுக்கு சாப்பிட கூட காசு இல்லாத நேரம். தனது சம்பளத்தில் இருந்து எங்களுக்கு சோறு போட்டு பார்த்துக் கொண்டவர் பாரதிராஜா.
இன்று அவர் இல்லை என்ற செய்தியை ஏற்கவே முடியவில்லை. அவர் எங்களுக்காக என்ன செய்தார் என்பதை பல முறை பேட்டிகளில் சொல்லியிருக்கிறோம். ஆனால் இன்று அவர் உடலின் முன் நின்று கொண்டு அதையெல்லாம் பேச மனசே வரவில்லை. அவர் படைப்புகள் இருக்கும். அதை பார்த்து சந்தோஷப்பட வேண்டியதுதான்." என்று கண்கலங்கினார்.
உறவினர்கள் மத்தியில் பரபரப்பு
பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சில உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் கங்கை அமரன் கோபத்தில் கத்தி பேசியிருந்தார், "எல்லோரும் கடைசி நேரத்தில் அவரை விட்டுட்டு போயிட்டீங்க... அவரை அனாதையா ஆக்கிட்டீங்க..."என்று கோபப்பட்டார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அப்போது நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் சமாதானப்படுத்தினர்.
கங்கை அமரன் விளக்கம்
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கங்கை அமரன் மிகவும் நிதானமாக பதிலளித்தார். "அது சில ஆதங்கங்கள். எங்களுக்குள் இருக்கும் விஷயம். அதை நாங்களே பேசி முடிவு பண்ணிக்கலாம். குழந்தைகளுக்குள் இருக்கும் மனஸ்தாபம், பிரச்சனைகள் மாதிரி தான் எங்களுக்கும் இருக்கும். அதை பெரிதுபடுத்த வேண்டாம்.
சில சின்ன சின்ன பிரச்சனைகள் வந்திருக்கலாம். அதை பேசித் தீர்க்க நானும், இளையராஜாவும் இருக்கிறோம். அதனால்தான் அந்த நேரத்தில் கோபப்பட்டு பேசினேன் " என்று விளக்கம் அளித்தார்.

உடைந்துபோன இளையராஜா
பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இசைஞானி இளையராஜா, வழக்கமாக எந்த சூழலிலும் அமைதியாக பேசுபவர். ஆனால் இந்த முறை அவரது குரலிலேயே வேதனையும் விரத்தியும் தெரிந்தது. "பாரதிராஜாவின் ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்." என்று கூறிய அவர், அதற்கு மேல் பேச முடியாமல் நிறுத்திவிட்டார்.
அப்போது செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியபோது, "பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இருந்தால்தானே பேசுவதற்கு?" என்று வேதனையுடன் பதிலளித்தார். அதன் பிறகும் கேள்விகள் தொடர்ந்ததால், "நான் என்ன பேட்டி கொடுக்கிறேனா? இது பேட்டி எடுக்கக்கூடிய இடமா?" என்று வருத்தத்துடன் கோபமாக கேள்வி எழுப்பினார். பின்னர் ஒரு கட்டத்தில் தனது நட்பின் ஆழத்தை வெளிப்படுத்திய இளையராஜா,
"எனக்கும் உங்களுக்கும் என்ன உறவு இருக்கிறதோ, அதேபோலத்தான் எனக்கும் பாரதிராஜாவுக்கும்." என்று கூறினார். அந்த ஒரு வரியே இருவருக்குமிடையேயான 50 ஆண்டுகளுக்கும் மேலான நட்பின் ஆழத்தை ரசிகர்களுக்கு உணர்த்தியது.
-
"என் குருநாதர்.. என்னால வர முடியாம போச்சு.." பாரதிராஜா மறைவு.. கண் கலங்கிய நெப்போலியன்.. அஞ்சலி! -
பாரதிராஜா உடலுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! அமைச்சர் ராஜ்மோகன் தகவல் -
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
மனோஜின் காலை நள்ளிரவில் அமுக்கிய டைரக்டர் பாரதிராஜா.. "என்னப்பா செய்றீங்க?" உருகிய தந்தை பாசம் -
Bharathiraja: பாரதிராஜா உடலை பார்த்து சிவகுமார் பேசிய வார்த்தை.. கண்கலங்க வைத்த காட்சி -
உன் நடிப்பு பிடிக்காதுன்னு பாரதிராஜா சொல்லுவாரு.. கடைசிவரை நான் நினைச்சது நடக்கல! ரஜினிகாந்த் உருக்கம் -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
"எங்கே பாரதிராஜா? இனி நான் என்ன பதில் சொல்வேன்?” கதறிய வைரமுத்து... கண்கலங்க வைத்த இறுதி மரியாதை! -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
பாரதிராஜா செய்ததை மறக்க முடியுமா? கதறிய நெப்போலியன்! சரத்குமார், குஷ்பூ, ரேவதி வருத்தம்














Click it and Unblock the Notifications