Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் கஷ்டத்தில் இருக்கும் போது ரச்சிதா எனக்காக வரவில்லை மைனா வருத்தம்..இதுதான் பிரச்சனைக்கு காரணமா?

ரச்சிதாவுக்கும் எனக்கும் ஆறு வருடங்களாக என்ன பிரச்சனை, எதனால் பேசவில்லை என முதல் முறையாக மைனா நந்தினி பேசியிருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு மைனா நந்தினி ரச்சிதாவை குறித்து பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே மைனா நந்தினியும், ரச்சிதா மகாலட்சுமியும் நல்ல தோழிகளாக இருந்து வந்தனர்.

ஆனாலும் சுமார் ஆறு வருடங்களாக இவர்களுக்குள் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்திருக்கு அதற்கான காரணத்தை பற்றி மைனா பேசியிருக்கிறார்.

சரவணன் மீனாட்சி நட்பு

சரவணன் மீனாட்சி நட்பு

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் கடைசி நேரம் மாற்றம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடைசி எலிமினேஷனாக வெளியேறிய மைனா நந்தினி முதல் முறையாக ரச்சிதாவை பற்றி பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார். மகாலட்சுமியும், மைனா நந்தினியும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் ஒன்றாக நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் அப்போது பல்வேறு பேட்டிகளையும் ஒன்றாக கொடுத்திருக்கின்றனர். அந்த நேரத்தில் மைனா ரச்சிதா தனக்கு அதிகமான உதவி செய்து வந்ததாகவும், நான் உடுத்தியிருந்த உடை கூட ரச்சிதா எனக்கு கொடுத்தது தான் என்று கூட பெருமையாக பேசி இருந்தார்.

மைனாவுக்கு கிடைத்த நட்பு

மைனாவுக்கு கிடைத்த நட்பு

அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய நட்பு அதற்குப் பிறகும் தொடர்ந்து வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதாவை பார்த்த மைனா நந்தினி பெரிய அளவில் நட்பை தொடரவில்லை. அவரை விடவும் மணிகண்டன், நிவி என பலருடன் நன்றாக பழகிக் கொண்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கூட தான் பிக் பாஸ் வீட்டிற்குள் கிடைத்த நட்பு என்றால் அது நிவி மற்றும் மணிகண்டனின் நட்பு என்று பெருமையாக பேசி இருந்தார். அந்த வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து கேள்விகளை எழுப்பி கொண்டு இருந்தனர்.

சோகத்தில் துணை நிற்கவில்லையாம்

சோகத்தில் துணை நிற்கவில்லையாம்

இந்த நிலையில் முதல் முறையாக அதற்கு மைனா நந்தினி விளக்கம் கொடுத்திருக்கிறார். காரணம் சரவணன் மீனாட்சி சீரியலில் இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக தான் இருந்திருக்கிறார்கள். மைனாவை பற்றி முழுவதும் தெரிந்த ஒரு தோழியாக ரச்சிதா இருந்திருக்கிறார். அதே நேரத்தில் ரச்சிதாவுக்கும் மைனா அப்படித்தான் இருந்திருக்கிறார். ஆனால் அதற்கு பிறகு மைனா நந்தினியின் வாழ்க்கையில் பல்வேறு சோகங்கள் ஏற்பட்டு இருக்கிறதாம் அந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக ரச்சிதா இல்லை. ஒரு சோகம் இருக்கும் போது நாம் ஒருவருடைய அன்பை தேடுவோம், அந்த மாதிரி ஒரு அன்பு எனக்கு அப்போ ரச்சிதா கொடுக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

மீண்டும் நட்பு வளர்ந்தது

மீண்டும் நட்பு வளர்ந்தது

அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் பெரிய அளவில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் நாங்கள் இருவரும் நன்றாகத்தான் இருந்தோம். பழைய மாதிரி இந்த ஆறு வருடங்களுக்குள் எங்களுக்குள் நடந்த பல்வேறு நிகழ்வுகளையும் அந்த வீட்டிற்குள் பேசி இருந்தேன். அதுபோல எங்கள் இருவருடைய நட்பையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் மீண்டும் வளர செய்தது என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் மைனா இருக்கும்போது ரச்சிதா மைனா மற்றும் ராபர்ட் மாஸ்டர் உடன் சேராமல் இருந்தால் பைனல் போவார் என்று ரச்சிதாவின் கணவர் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+