பிக் பாஸில் நாளை எலிமினேஷன்.. நடந்து முடிந்த சூட்டிங்.. வெளியேறியது இவர்தானா? லீக்கான தகவல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நான்காவது வாரத்திற்கான எலிமினேஷனில் யார் வெளியேறி இருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் சுனிதா இருந்த நிலையில் அவர் நாமினேஷன் ஃப்ரீ டிக்கெட் பெற்றுவிட்டதால் அவர் சேவ் ஆகிவிட்டார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். அதில் அதிகமானோர் விஜய் டிவி பிரபலங்கள்தான். ஆனாலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார்.

அதை தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் அர்னவ் வெளியேற்றப்பட்டார். இரண்டு ஆண் போட்டியாளர்கள் வெளியேறியதை தொடர்ந்து மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் நிகழ்ச்சியில் 9 ஆண் போட்டியாளர்களும் 9 பெண் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.
தெய்வமகள் சீரியல் நடிகரின் மகன் விபத்தில் மரணம்.. சாப்பிட்ட சோறு கூட செரிக்கல! கலங்க வைத்த காட்சி
இவர்களில் இப்போது மூன்று பேர் வெளியேறியதை தொடர்ந்து இந்த வாரத்தில் நாளைக்கான எபிசோடில் ஐந்து வைல்ட் கார்ட் என்ட்ரி வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் லிஸ்டில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் எலிமினேஷன் இருக்காது என்று சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் தற்போது வெளியான தகவலின் படி அன்ஷிதா தான் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. நாளைக்கான எபிசோட்டின் ஷூட்டிங் இன்று நடைபெற்றிருக்கும் நிலையில் அன்ஷிதா வெளியேற்றப்பட்டுவிட்டார் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications