பிக் பாஸ் 8: திடீரென சௌந்தர்யாவுக்கு முத்தம் கொடுத்த ரஞ்சித்.. கதறி அழுத ஜாக்குலின்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்று நடிகர் ரஞ்சித் சௌந்தர்யா நஞ்சுண்டன் நெற்றியில் திடீரென முத்தம் கொடுத்து இருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத சவுந்தர்யா அதிர்ச்சியில் இருந்தார். இந்த சம்பவம் இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை சச்சரவுகளும் பிரச்சனைகளும் நிறைந்தது தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நேற்று நடந்த நிகழ்வுகள் ஒரு பக்கம் சிரிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் இன்னொரு பக்கம் என்ன இவங்க இப்படி இறங்கிட்டாங்க என்று சொல்ல வைத்திருந்தது.

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் போட்டி போடுகிறார்கள். இவர்களில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று பிக் பாஸ் ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதில் அதிகமாக பெண்கள் அணியினர் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் ஆண்கள் தரப்பினர் நாமும் கேமரா முன்பு தெரிய வேண்டும் என்பதற்காக மணி கணக்கில் கூட்டம் கூடி ஒரு பிளான் போட்டார்கள்.
அதாவது பெண்கள் எல்லோரையும் நாம பிராங்க் செய்ய வேண்டும் என்று ரவீந்தர் தலைமையில் முடிவெடுக்க அதற்கு வசனம் கதை டைரக்ஷன் எழுதியது எல்லாம் ரஞ்சித் தான். ரஞ்சித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே இருந்தது. காரணம் அவர் கவுண்டம்பாளையம் திரைப்படத்திற்கு பிறகு அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
அதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றும் அவர் அதே மனநிலையில் நடந்து கொள்வாரா என்று எதிர்பார்ப்பு இருந்தது. வெளியில் இருக்கும் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களும் ரஞ்சித்தை இதை வைத்துதான் கிண்டல் செய்து வருகிறார்கள். நேற்று விஜே விஷால் ரஞ்சித் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது ரஞ்சித் சார் மைண்ட் வாய்ஸ், இந்த வாரம் என்னை நாமினேஷன் செஞ்சது எவன்டா அவனுக்கு நான் எமன்டா என்ற டயலாக் வந்திருக்கும் என்று கிண்டல் செய்திருந்தார்.

அதற்குப் பிறகு பெண்கள் முன்பு நாம சண்டை போடுவது தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று ரஞ்சித் சொன்ன கதையை கேட்டு எல்லோரும் சிரித்து இருந்தனர். கடைசியில் அவர்கள் பிளான் போட்டதுபடியே சீரியஸாக நடிக்க அதை உண்மை என்று நம்பிய பெண்கள் இவர்கள் சண்டையை சமாதானம் செய்து விட வேண்டும் என்று தீவிரம் காட்டினர். அதில் ஜாக்குலின் ஒருவர். ஆனால் கடைசியில் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவரும் பிராங்க் செய்தோம் என்று எல்லோர் முன்பும் உடைத்து விட்டனர்.
பெண்கள் ஏமாந்து போனதை பார்த்து ஏதோ சாதித்தது போல ரஞ்சித் உட்பட ஆண்கள் அணியினர் எல்லோரும் கொண்டாடினர். அந்த நேரத்தில் திடீரென்று ரஞ்சித் ஓடி வந்து சௌந்தர்யா நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு ஜாக்குலின் கன்னத்தையும் செல்லமாக கிள்ளிவிட்டு சென்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஜாக்குலின் இவங்க சண்டையை உண்மை என்று நம்பி நான் தீர்த்து வைக்க போனது தப்பா? அப்போ இவங்க என்ன முட்டாள் ஆக்கிட்டாங்க நான் என்ன லூசா என்று கண்கலங்கி அழுது கொண்டு இருந்தார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் சௌந்தர்யா நெற்றியில் ரஞ்சித் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்ஸ்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு ரஞ்சித் செய்தது நாடக அப்பாவா அல்லது நாடகக் காதலா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications