எதிர்நீச்சலில் டுவிஸ்ட் ..நடித்து ரேணுகாவிடம் மாட்டிக்கொண்ட குணசேகரன்..கரிகாலன் கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தான் பக்கவாதம் வந்ததாக நடித்துக் கொண்டிருப்பதை பற்றி கதிர் மற்றும் கிள்ளிவளவனிடம் பேசி இருக்கிறார்.

இந்த நிலையில் வீட்டிற்கு வந்து குணசேகரன் செய்யும் செயலை பார்த்து சந்தேகம் அடையும் ரேணுகா எதிர்பாராத கவுண்டர் கொடுக்கிறார்.

Ethirneechal serial promo

அதைத் தொடர்ந்து கரிகாலனும் கேள்வி மேல் கேள்வி கேட்க குணசேகரன் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சென்னைக்கு போயிருந்த குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கிறார். வீட்டில் அனைவரும் டைனிங் ஹாலில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஞானம், "என்ன பேச்செல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு" என்று ரேணுகாவை திட்டிக் கொண்டு இருக்கிறார்.

அதற்கு குணசேகரன், "எப்பா ஞானம் அது ரொம்ப நாளா இப்படித்தான் பா போய்கிட்டு இருக்கு" என்று சொல்ல, அதற்கு ரேணுகா, "பக்கவாதம் வந்து இப்படி யாரையும் நான் பார்த்ததே இல்லை. இது பக்காவான பக்காவாதமானலா இருக்கு" என்று சொல்ல நந்தினி நக்கலாக சிரிக்கிறார். அதே நேரத்தில் விசாலாட்சிக்கும் சந்தேகம் வருகிறது.

Ethirneechal serial promo

இந்த நிலையில் வீட்டு வாசலில் பைக் பக்கத்தில் சக்தியும் ஜனனியும் நின்று கொண்டு உள்ளே நடப்பதை பற்றி பேசிக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து வெளியே புல்வெளியில் சேரில் அமர்ந்தபடி குணசேகரன் ஞானத்திடம்," எப்படி கணீர் கணீர் என்று பேசுவேன் ஞானம். இப்ப பேச்சியே குளறி குளறிலா வருது" என்று சொல்ல, அதற்கு ஞானம் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. நான் போய் தண்ணி எடுத்துட்டு வரேன் என்று போகிறார்.

அந்த நேரத்தில் குணசேகரன் தன்னுடைய இரண்டு கைகளிலும் சொடக்கு எடுத்து செருமிக் கொண்டிருக்க, அதைத் தொடர்ந்து வெளியில் அவர்களோடு கதிரும் அமர்ந்திருக்க, அப்போது கரிகாலன் குணசேகரனுக்கு டீ கொண்டு வருகிறார். அப்படியே மாமா எனக்கு ஒரு டவுட்டு என்று கேட்க, குணசேகரன் திருதிருவென முழிக்கிறார். இப்படியாக பிரமோ முடிவடைந்து இருக்கிறது.

Ethirneechal serial promo

இந்த நிலையில் இன்றைய பிரமோவில் ரேணுகா வேற லெவலில் கவுண்டர் கொடுத்து குணசேகரனை காண்டாக்கி இருக்கும் விதம் பலரையும் இன்றைய எபிசோடு எதிர்பார்க்க வைத்திருக்கிறது. அதே நேரத்தில் கரிகாலனுக்கு குணசேகரன் நடிப்பது பற்றி சந்தேகம் வந்திருக்குமா? என்றும் கேள்விகள் குவிக்கிறது.

அதே நேரத்தில் அதிகமான ரசிகர்கள் எந்த பிரமோவில் கூட சக்தி மற்றும் ஜனனியை ஏதோ ஃபார்மாலிட்டிக்காக காட்ட வேண்டுமே என்று காட்டுகிறார்கள். அவர்களுக்கு சரியான முக்கியத்துவம் இல்லையே, என்று தங்களுடைய வருத்தத்தையும் தெரிவித்து வருகிறார்கள். அதுபோல அதிகமானோர் ரேணுகா உடைய மாசான வசனங்களுக்கு நெருப்பு பறக்க விட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+