எதிர்நீச்சல்: லூசுத்தனமான வேலை பார்த்த குணசேகரன்.. கதிரை அடித்த சக்தி.. பரபரப்பான திருப்பம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தான் ஜெயித்து விட்டதால் ஜனனி என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகிறார்.
எங்களுடைய முடிவுகளை எல்லாம் எடுப்பதற்கு நீங்க யாரு என்று ரேணுகா குணசேகரனை மிரட்டுகிறார்.
இந்த நிலையில் ஜனனியை வீட்டை விட்டு போக சொல்லி கதிர் அடிக்க வர சக்தி ஜனனிக்காக கதிரை அடிக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த முக்கிய சீரியலில் அடுத்தடுத்து பல விருப்பங்கள் யாரும் எதிர்பார்க்காத விதமாக இருந்து வருகிறது. கரிகாலன் மற்றும் ஆதிரை திருமணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கும் வகையில் இருக்கிறது.

இதைத் தொடர்ந்து நேற்றைய எபிசோடில் ஆக்ஸிடெண்ட் ஆகி மருத்துவமனையில் இருந்த அருணை பார்ப்பதற்காக சக்தியும் ஜனனியும் ஹாஸ்பிடல் போயிருந்தனர். அங்கே ஜனனியை எஸ் கே ஆர் மற்றும் சாருலதா இருவரும் திட்ட, இருவரிடமும் ஜனனி மன்னிப்பு கேட்டுக் கொண்டு தான் தோத்து போய்விட்டதாக கூறிக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் ஆரம்பித்து வச்சத நல்லபடியா நடத்தணும்னு தான் நான் இப்படி பண்ணுனேன். ஆனா இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல என்று ஜனனி பீல் பண்ணுகிறார். அதே நேரத்தில் ஆதிரையை குணசேகரன் கரிகாலன் வீட்டில் கொண்டு போய் விட அங்கே ஆதிரை விளக்கு ஏற்ற மாட்டேன் என்று அடம்பிடித்தபடி அழுது கொண்டிருக்க, குணசேகரன் நான் வீட்டுக்கு போகிறேன் என்று கிளம்பும்போது ஞானத்தின் காலை பிடித்து ஆதிரை அழுது கொண்டிருக்க ஞானம் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறார்.
அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த குணசேகரன் விசாலாட்சி இடம் உன்னுடைய பொண்ணை அவ எங்க இருக்கணுமோ அங்க கொண்டு விட்டு வந்தாச்சு என்று சொல்ல விசாலாட்சி என் பொண்ணோட வாழ்க்கையை உன் கௌரவத்துக்காக அழித்துவிட்டாய் என்று அழுது கொண்டு இருக்க, இப்படி அழுது தான் அன்னைக்கு அவளை ஓட வச்சுட்ட இனி நான் உங்க நடிப்பை நம்ப மாட்டேன் நான் முழிச்சுக்கிட்டேன் என்று கூறுகிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வீட்டிற்கு வந்த ஜனனி மற்றும் சக்தியிடம் குணசேகரன் நீ என்னிடம் தோற்றுவிட்டா என்கிட்ட மன்னிப்பு கேளு என்று சொல்ல, இப்பவும் சொல்றேன் நான் தான் ஜெயிச்சேன் என்று ஜனனி சொல்ல, எதிர்த்து பேசுறியா என்று கதிர் ஜனனி அடிக்கப் போக, சக்தி ஜனனிக்காக கதிரை அடிக்கிறார். என் பொண்டாட்டியை யாரும் இந்த வீட்டில எதுவும் சொல்ல கூடாது என்று மிரட்டுகிறார்.












Click it and Unblock the Notifications