For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாலட்சுமிக்கு ஏன் இந்த திடீர் முடிவு.. நல்லா தானே போய்கிட்டு இருக்குது..!? நெட்டிசன்களின் கேள்விகள்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு சில வாரங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த மகாலட்சுமியிடம் நெட்டிசன்கள் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி திடீரென்று திருமணம் செய்து விட்டாரே என்று ஏக்கத்தில் இருந்த அவருடைய ரசிகர்களுக்கு தற்போது மகாலட்சுமியின் முடிவு வருத்தத்தை கொடுத்திருக்கிறதாம்.

ஏற்கனவே இவருடைய திருமணத்தை வைத்து நெட்டிசன்கள் ஒரு பக்கம் கலாய்த்து கொண்டு வரும் நேரத்தில் மகாலட்சுமி தற்போது விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இதனால் மேலும் இவரை பற்றி பலரும் கருத்து தெரிவிக்க ஏதுவாக இருக்கும் என்று இவருடைய நலம் விரும்பிகள் வருத்தத்தோடு கூறி வருகிறார்கள்.

திருமணம் ஆன இத்தனை நாளுக்குள் இப்படி ஒரு முடிவா!! ரவீந்தர் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்திருமணம் ஆன இத்தனை நாளுக்குள் இப்படி ஒரு முடிவா!! ரவீந்தர் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்

ஃபேவரிட் தொகுப்பாளர்

ஃபேவரிட் தொகுப்பாளர்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் வாசுகி கேரக்டரில் நடித்து வரும் மகாலட்சுமி இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் நடிக்காத சேனல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இவர் பல சேனல்களில் நடிகையாகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் தொகுப்பாளர்களில் ஒருவராக இவரும் இருந்து வருகிறார். மகாலட்சுமி சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். போட்டோ சூட் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்

மாடர்ன் உடைகளிலும், புடவைகளிலும் இவர் நடத்தும் போட்டோ சூட் பார்ப்பதற்காகவே சமூக வலைத்தளத்தில் இவரை சுற்றி பல ரசிகர்கள் வருகிறார்கள். இந்த நிலையில் இவர் இரண்டாவது திருமணத்தை திடீரென்று முடித்து விட்டார். அதுவும் தயாரிப்பாளர் ரவீந்தரை இவர் திருமணம் செய்தது பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருந்து வருகிறது. இவர்கள் இருவருக்கும் இருக்கும் உருவ வேற்றுமையை கூறி பலர் மகாலட்சுமிக்கு அறிவுரை கூறியுள்ளனர். காதல் முன்பு உருவமோ வேற எதுவுமே தேவையில்லை என்பதை தற்போது மகாலட்சுமி நிரூபித்து விட்டார் என்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

பரபரப்பை ஏற்படுத்தும் புகைப்படங்கள்

பரபரப்பை ஏற்படுத்தும் புகைப்படங்கள்

திருமணம் முடிந்து ஒரு சில வாரங்கள் ஆனாலும் மகாலட்சுமியின் திருமண போட்டோக்கள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு ரவீந்தரோடு மகாலட்சுமி செல்லும் இடமெல்லாம் புகைப்படங்களை எடுத்து ரசிகர்களுக்கு மேலும் வெறுப்பேற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது விஜய் டிவியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறாராம். இதை பார்த்த இவருடைய தீவிரமான ரசிகர்கள் அங்கே செல்ல வேண்டாம். அங்கே சென்ற பல பிரபலங்கள் பிரிந்து விட்டார்கள் அல்லது அவர்களுடைய வாழ்க்கையை மாறிவிட்டது. அதனால் நீங்கள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுரைகளை கூறி வருகிறார்கள்.

ரசிகர்களின் அறிவுரைகள்

ரசிகர்களின் அறிவுரைகள்

மகாலட்சுமியின் திருமணத்திற்கு பிறகு தற்போது அவருக்கு மஞ்சள் கயிற்றில் தாலிகோர்க்கும் பங்க்ஷன் நடைபெற்று இருக்கிறது. அந்தப் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார். அதேபோல அந்த புகைப்படங்களை ரவீந்தர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய மனைவிக்கு இது அடையாளம் இல்லை. அவள் ஆசைப்பட்டதற்காக இதை நான் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் ஏன் இப்படி எல்லாம் செய்கிறார்..?? மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகு அவருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். திருமண புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதால் பலரும் இவர்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் மன நிம்மதி போய்விடும் என்று மகாலட்சுமிக்கு அறிவுரைகளை கமெண்ட்களில் அனுப்பி வருகிறார்கள்.

English summary
Mahalakshmi's decision has given grief to her fans, who were longing for the small screen actress Mahalakshmi to get married suddenly. Mahalakshmi is currently participating in a Vijay TV show at a time when netizens are already making a fuss about her marriage. His well-wishers are sadly saying that this will lead to more people commenting on him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X