"பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா?” சரிகமபவில் தேவயானியின் மகள் இனியா பாடிய பாடல் நெகிழ்ந்த தந்தை ராஜகுமாரன்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சரிகமப சீனியர் சீசன் 5' நிகழ்ச்சி, நடிகை தேவயானியின் மகள் இனியாவின் உணர்வுபூர்வமான பாடலால் பலரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த வாரம் நடைபெற்ற 'டெடிகேஷன் ரவுண்டு' நிகழ்ச்சியில், இனியா தனது தந்தை இயக்குனர் ராஜகுமாரனுக்காக ஒரு சிறப்புப் பாடலைப் பாடினார்.

ராஜகுமாரனை பெருமைப்படுத்திய இனியா
இனியா, தனது தந்தை ராஜகுமாரன் இயக்கிய வெற்றி படமான'நீ வருவாய் என' என்ற படத்தில் இடம்பெற்ற, "பூங்குயில் பாட்டு புடிச்சிருக்கா, பூங்காற்றும் புடிச்சிருக்கா" என்ற பாடலைப் பாடி, மேடையில் இருந்த அனைவரையும் வியக்க வைத்தார். இந்தப் பாடல் தேவயானி கதாநாயகியாக நடித்த படம் என்பதால், இது ஒரு குடும்பப் பாடலாகவும் அமைந்தது.
இந்த உணர்வுபூர்வமான தருணத்தில், ராஜகுமாரன் கண்கலங்கிப் பேசினார். "என்னுடைய மகள் இனியா, 'சரிகமப' நிகழ்ச்சியில் வந்து நிற்கிறபோதுதான், நான் ஏதோ சாதித்துவிட்டதாக நினைக்கிறேன். என் மகள் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறாள் என்றால், அதற்கு காரணம் என்னுடைய உழைப்பு ஒன்றும் இல்ல, தேவயானி அவங்களுடைய உழைப்புதான்," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தேவயானி - குடும்பப் பின்னணி
நடிகை தேவயானி, 90களின் இறுதியில், தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தார். அவர் நடித்த பல திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன. குறிப்பாக, 'காதல் கோட்டை', 'சூரிய வம்சம்', 'நீ வருவாய் என' போன்ற படங்கள் அவரது நடிப்புத் திறனுக்கு நல்ல பெயரைக் கொண்டு வந்தன.
தேவயானி, தனது கணவர் ராஜகுமாரன் இயக்கத்தில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில், 'நீ வருவாய் என' மற்றும் 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்தத் திரைப்படங்கள், அவர்களின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தன.
என் மகள் என் கூட அட்டாச் ஆகிட்டா.
தேவயானி திரைப்பயணம்
இனியாவுக்காகப் பேசிய தேவயானி, "என் இனியா என் பக்கத்துல வர மாட்டாள். ஆனால், இந்த நிகழ்ச்சியின் மூலமாக இப்போ என் மகள் என் கூட ரொம்ப அட்டாச் ஆகிட்டாள்," என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். இது, ஒரு தாயின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு தருணமாக இருந்தது.
இனியா 'சரிகமப' நிகழ்ச்சியில் பாடிய பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மயில் போல பொண்ணு ஒன்னு, பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், வா வா என் தேவதையே, நலம் நலம் அறிய ஆவல் போன்ற பாடல்கள், அவரது இசைத் திறமையை வெளிப்படுத்தின. இந்த வெற்றியின் மூலம், இனியா தனது பெற்றோர்களின் கனவை நிறைவேற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications