சிறகடிக்க ஆசை: கிரிஷ் அம்மா நான்தான்! உளறிய ரோகிணி.. அதிர்ச்சியில் மயக்கம் போட்ட விஜயா! மனோஜ் கேட்ட கேள்வி
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை 22ஆம் தேதிக்கான எபிசோடில் கிரிஷிடம் உன்னுடைய அம்மா யார் என்று கேட்க, அவன் கல்யாணி என்று சொல்கிறார். அதே நேரத்தில் ரோகிணி கல்யாணி என்று கையெழுத்து போடுவதை பார்த்து மனோஜ் கேள்வி கேட்கிறார். அதுபோல விஜயாவிற்கு முக்கியமான விஷயம் ஒன்று தெரிய வருகிறது இதனால் அவர் அதிர்ச்சியில் மயக்கம் போடுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் நடக்கவிருக்கும் சில முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்க்கலாம். ரோகிணி தன்னுடைய தாயிடம், முத்துவை உடனடியாக கிரிஷை அழைத்து வரச் சொல்லும்படி கூறுகிறார். அதற்கு அவரது அம்மா இன்னும் பத்து நாட்கள் கிரிஷ் இங்கே தான் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அவனை என்ன செய்வது என்று கேட்கிறார். அதற்கு ரோகிணியோ நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார்.

நள்ளிரவில் கிரிஷை எழுப்பி தனது அறைக்கு அழைத்து வருகிறார் ரோகிணி. யாரிடமும் அம்மா பற்றி எதுவும் சொல்லக் கூடாது என்று கிரிஷிடம் கூறுகிறார். கிரிஷ் அம்மா நான் உங்களுடனே படுத்துக்கொள்கிறேன் என்று சொல்ல, மீனா கிரிஷை தேடி வருகிறார். கதவு மறைவில் நின்று கிரிஷை போகச் சொல்லி விடுகிறார் ரோகிணி. கிரிஷும் சமாளித்து விடுகிறான். மீனா தண்ணீர் எடுத்து வரச் சொல்லி கேட்கிறார். என்ன வேண்டும் என்றாலும் என்னிடம் கேள் என்று மீனா கிரிஷிடம் கூறுகிறார்.
மறுநாள் காலையில் முத்துவும் மீனாவும் கிரிஷிற்கு சாப்பாடு ஊட்டுகிறார்கள். கிரிஷை உட்கார வைத்து குடும்பத்தினர் அவன் அம்மா பற்றி கேட்கிறார்கள். ரோகிணியைப் பற்றி வெளியே சொல்லாமல் கிரிஷ் சமாளிக்கிறான். ஒரு கட்டத்தில் கிரிஷின் பள்ளிக்கு லீவ் லெட்டர் எழுதி கொடுக்கிறார் ரோகிணி. அதில் கல்யாணி என்று கையெழுத்திடுகிறார். மனோஜ் அதை வாங்கிப் பார்க்கிறார். ரோகிணி உன் பெயரை எழுதி கையெழுத்து போட்டு இருக்கிறாயே என்று கேட்கிறார். அவங்க அம்மா எழுதின மாதிரியே இருக்கணுமே என்று சமாளிக்கிறார் ரோகிணி.
விஜயா நடன வகுப்பில் ரதி திடீரென மயங்கி விழுகிறார். மருத்துவரை அழைத்து வந்து பரிசோதிக்கிறார்கள். அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறார். விஜயா அதிர்ச்சியடைகிறார். பின்னர் வெளியில் வந்த விஜயா மயங்கி விழுகிறார். ரதி தன்னுடைய காதலனிடம் நான் அப்போதே சொன்னேன். நீதான் கேட்கவில்லை. இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறிவிட்டு செல்கிறாள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications