சிறகடிக்க ஆசை: கோலாகலமாக நடக்கும் சீதாவின் திருமண ஏற்பாடு.. பிரச்சனை செய்யும் மனோஜ்.. முத்து செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை 5ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி மற்றும் அருண் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அதில் மனோஜ் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். அப்போது முத்து என்ன முடிவு செய்தார் என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜை திருடன் என்று நினைத்து மீனாவும் ஸ்ருதியும் போட்டு அடிக்கின்றனர் .அப்போது விஜயா வந்து அவரும் அவர் பங்குக்கு வெளுத்து வாங்குகிறார். அந்த நேரத்தில் ரோகிணி வந்து பிஏ என நினைத்து அவரும் போட்டு அடிக்கிறார். பிறகு அண்ணாமலை மற்றும் முத்து வர அவர்களிடம் விஷயத்தை சொன்னதும் முத்து என் வீட்டிலே திருட உனக்கு அவ்வளவு தைரியமா? என்று கையை முறுக்க அம்மா என்று மனோஜ் சத்தம் போட்டதும், விஜயா முத்துவிடம் விடு விடு என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

பிறகு இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு என்று மனோஜ் முகத்தில் இருக்கும் முகமூடியை எடுக்க, அங்கு மனோஜை பார்த்ததும் டேய் நீ தான் திருட வந்தியா? என்று கேட்க டேய் நான் திருட வரல தடுத்து நிறுத்துனேன். ஆனால் என்னை போட்டு அடிச்சிட்டாங்க, அவன் என் கண்ணாடியை கழட்டிட்டு எனக்கு முகமூடி போட்டு விட்டுட்டான் என்று சொன்னதும் குடும்பத்தினர் எல்லாருக்கும் உண்மை தெரிகிறது.

மறுபக்கத்தில் பிஏ கட்டுடன் உட்கார்ந்திருக்க, சிட்டி நாங்க ஆள் அனுப்புகிறோம் என்று சொன்னதுக்கு நீ தானே வீராப்பா போன உனக்கு இது தேவைதான் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ரோகிணிக்கு வேணும்னே பழி வாங்கிட்டா அவளை சும்மா விடமாட்டேன் என்று ரோகிணிக்கு போன் போட்டு என்னை மாட்டிவிட்டியே என்று கோபப்பட, உனக்கு சொன்ன வேலையே செய்ய துப்பில்லை என்று ரோகிணி திட்டுகிறார்.

அப்போ உன்னுடைய கொழுந்தனாரு முத்து கிட்ட நான் சொல்லப்போறேன் என்று சொன்னதும் சொல்லு அவனுக்கு தெரிஞ்சா பரவாயில்லை. இந்த ஒரு உண்மையை தெரிந்துவிட்டால் இனியாவது நான் நிம்மதியா இருப்பேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார். அதற்கு சிட்டி இப்போதைக்கு இந்த விஷயத்தை கொஞ்சம் ஆற போடு என்று சொல்கிறார். மறுபக்கத்தில் சீதாவின் கல்யாண வேலைகள் பரபரப்பாக மண்டபத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ரோகிணி சீதாவுக்கு மேக்கப் போட்டு ரெடி பண்ணுகிறார்.

அப்போது முத்து கல்யாண வேலைகளை முன் நின்று செய்து கொண்டிருக்கிறார். சீதா சோகமாக இருக்கிறார். அதை பார்த்த மீனா என்னவென்று கேட்க இவ்வளவு விஷயம் நடந்திருக்கு இந்த நேரத்தில் கூட நான் உண்மையை சொல்லவில்லையே என்று எனக்கு ஒரு மாதிரி வருத்தமா இருக்கு, மாமாவை கூப்பிட்டு உண்மையை சொல்லிடலாமா? என்று கேட்க, இந்த நேரத்தில் சொன்னால் சரிப்பட்டு வராது என்று சீதா சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ஸ்ருதி வந்து சீதாவுக்கு நகையை போடுகிறார். மறுபக்கத்தில் திருமண பந்தியில் யாரோ பிரச்சனை செய்வதாக முத்துக்கு தகவல் வந்ததும் அங்கு போய் பார்க்க, அங்கு மனோஜ் தனக்கு வடை வரலன்னு சண்டை போட்டு கொண்டு இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+