திருமணம் முடிந்த அடுத்த நாளே மகாலட்சுமி வெளியிட்ட பீலிங்கான பதிவு.. சோகத்தில் 90ஸ் கிட்ஸ்
சென்னை: சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தற்போது தன்னுடைய காதல் கணவரான ரவீந்திரனை நினைத்து உருக்கமான பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
சுட்டெரிக்கும் வெயிலில் மஞ்சள் தாலியோடு முகத்தில் புன்னகை தழுவ மகாலட்சுமி வெளியிட்ட போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக லைக் செய்யப்பட்டு வருகிறது.
திருமணம் முடிந்த அடுத்த நாளில் கணவரை நினைத்து கணவருக்காக சமூக வலைத்தளத்தில் மகாலட்சுமி போஸ்ட் வெளியிட்டது தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

தொகுப்பாளராக அறிமுகம்
ஒரு தொகுப்பாளராக அறிமுகம் ஆகி ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த மகாலட்சுமி சீரியல்களில் குணச்சித்திர வேடங்களிலும், நெகட்டிவ் கேரக்டர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். 90ஸ் ஹிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளர்களில் ஒருவராக இப்ப வரைக்கும் இருந்து வரும் மகாலட்சுமி தற்போது இரண்டாம் திருமணம் செய்து 90ஸ் கிட்ஸ்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார் .

சர்ச்சைகளில் சிக்கல்
ஏற்கனவே மகாலட்சுமிக்கு திருமணம் முடிந்து அது விவாகரத்து ஆகியிருக்கும் நிலையில் தற்போதைய திருமணத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அவருடைய ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மகாலட்சுமி சமூக வலைத்தளத்தில் அதிகமான வதந்திகளுக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார். பல நேரங்களில் சர்ச்சைகளில் இவருடைய பெயர் சிக்கிக்கொண்டிருந்தாலும் எதற்குமே வாயை திறக்காமல் மௌனமாக தான் இருந்து வந்துள்ளார்.

மகாலட்சுமியின் பதில்
மகா லட்சுமிக்கும் அவர் கூட நடித்த நடிகர் ஒருவருக்கும் தொடர்பு என்று அந்த நடிகரின் மனைவி போலீசில் கம்பளைண்ட் கொடுத்து சமூக வலைத்தளத்தில் இவருடைய பெயரை அதிகமாக அசிங்கப்படுத்தி இருந்தார். ஆனால், நாங்கள் நட்பாக தான் பழகுகிறோம் என்று அதற்கு மேல் எதையும் சொல்லத் தேவையில்லை என்று மகாலட்சுமியின் தரப்பிலிருந்து கூறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மகாலட்சுமி வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

செம ஃபீலிங் தான்
மகாலட்சுமி, விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளரான ரவீந்திரனோடு தற்போது இவருக்கு திருமணம் முடிந்து இருக்கிறது. திருமண செய்தியை சமூக வலைத்தளத்தில் இருவரும் தெரிவித்திருந்தனர். இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருமணம் முடிந்த மறுநாளான இன்று மகாலட்சுமி தன்னுடைய கணவருக்காக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார். அதில், வாழ்க்கை அழகாக இருக்கிறது. அதை நீ செய்தாய் என் புருஷா!! என்று ரவீந்திரனை டேக் செய்து இருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications