கெட்டிமேளம் : மகேஷ்க்கு லட்சுமி கொடுத்த அட்வைஸ்.. என்ட்ரி கொடுக்கும் பிரபலம் - இன்றைய அப்டேட்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசியிடம் பேச துளசி நீங்க ஆசைப்பட்ட பொண்ணோட உங்களுக்கு கல்யாணம் நடக்க வாழ்த்துக்கள் என சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
நேற்றைய எபிசோடில் வெற்றிக்கு போன் செய்த துளசி தன்னுடைய மகளை காப்பாற்றியதற்காக நன்றி சொல்லி இருக்கிறார். அதோடு தன்னுடைய மகளுக்கு எந்த கடையில் தோசை வாங்கி கொடுத்தீங்க அது அவளுக்கு ரொம்ப புடிச்சி இருக்கிறது என்று சொல்ல, அதற்கு வெற்றியும் கடையின் அட்ரஸ் சொல்கிறார்.

அதுபோல அந்த நேரத்தில் தான் வெற்றிக்கு பெண் பார்ப்பதற்காக புரோக்கர் கொண்டு வந்த போட்டோக்களை வெற்றியின் அப்பா பார்த்துக் கொண்டிருக்கிறார். அதில் இரண்டு பெண் போட்டோவை மட்டும் செலக்ட் செய்து அதை வெற்றியிடம் காட்டுகின்றனர். அந்த நேரத்தில் கரண்ட் போய்விடுகிறது.
நல்ல விஷயம் பேசுற நேரத்தில் கரண்ட் போய்விட்டதே என்று வெற்றியின் அப்பா அப்செட்டாகிறார். ஆனால் வெற்றி துளசி தான் தன்னிடம் பேசினார் என்று தெரியாமலேயே அவரிடம் கொஞ்சி கொஞ்சி பேசுகிறார். அதை பார்த்து அவருடைய நண்பர்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து இன்று, மகேஷ் பத்திரிகையுடன் வீட்டிற்கு வந்து முதல் பத்திரிகையை கொடுத்து எல்லாரது காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறான். இதனையடுத்து லட்சுமி சிவராமன் ஆகியோர் ரகுராம் மற்றும் கேசவனுடன் வெற்றியின் வீட்டிற்கு வந்து பத்திரிகை வைக்கின்றனர்.

எம். எல்.ஏ தனது மூத்த மகனையும் மருமகளையும் அறிமுகம் செய்து வைக்கிறான், என் இரண்டாவது பையன் வெற்றி இப்போ வந்துடுவான் என்று சொல்ல வெற்றியும் வீட்டிற்கு வருகிறான். வெளியில் கேசவன் வண்டியை பார்த்த அவன் வெளியே கிளம்பி சென்று விடுகிறான்.
அடுத்து கோவிலுக்கு வந்த லட்சுமி அங்கு வெற்றியை சந்திக்கிறாள். வெற்றி லட்சுமியை வீட்டில் டிராப் செய்ய லட்சுமி அஞ்சலியின் கல்யாண பத்திரிகையை கொடுத்து அழைக்க வெற்றி அக்கா இது நம்ம வீட்டு கல்யாணம், கண்டிப்பா வந்துடுறேன் என்று சொல்கிறான்.
அதனை தொடர்ந்து மகேஷ் மீண்டும் வீட்டிற்கு வர காரை பார்த்த லக்ஷ்மிக்கு ஸ்ரீகாந்தை நியாபகம் வர காரை பயன்படுத்த வேண்டாம் என்று அட்வைஸ் கொடுக்க மகேஷ் அஞ்சலிக்கு போன் செய்து காரணம் கேட்க துளசி கல்யாணத்தில் நடந்த விஷயத்தை சொல்கிறாள்.
இங்கே மோனிகா தியாவை நினைத்து வருத்தப்பட ஜெகன் மற்றும் அவனது அம்மா தியாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிடுகின்றனர், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

அதுபோல இந்த சீரியலில் வெற்றிக்கு பார்த்த பெண்ணாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஷாலினி காட்டப்பட்டிருக்கிறார். அதனால் அவர் இந்த சீரியலில் இனி என்ட்ரி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த சீரியலில் சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி இன்று பல சேனல்களில் நடித்த நடிகர்கள் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது ஷாலினியின் வருகை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications