மதவெறியர்களுக்கு “நோஸ் கட்”.. பந்தால் பதம் பார்த்த அர்ஷ்தீப் - ஒரே ஓவரில் தெ.ஆவை சரித்த ‘சிங்’கம்
திருவனந்தபுரம்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரு கேட்சை தவற விட்டதற்காக தன் மீது மதவெறி விமர்சனங்களை முன்வைத்தவர்களுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் மூலமாக பதிலடி கொடுத்து இருக்கிறார் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்.
இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி கடைசி ஓவரில் அதிரடியாக ஆடி இந்திய அணியை தோல்வியடைந்தது.
இந்திய அணி பாகிஸ்தானில் தோற்ற கோபத்தை ரசிகர்கள் பலரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மீது காட்டத் தொடங்கினர். போட்டியின் கடைசி தருணத்தில் பாகிஸ்தானின் வீரர் ஆசிப் அலியின் கேட்சை இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தவறவிடுவார்.

மதவெறி விமர்சனம்
இதனால் ஆத்திரத்தில் கேப்டன் ரோகித் சர்மா அர்ஷ்தீப் சிங்கை பார்த்து மைதானத்திலேயே கத்தினார். இறுதியில் ஆசிப் அலி 8 பந்துகளில் 16 ரன்களை விளாச பாகிஸ்தான் வெற்றிபெற்றது. உடனே ரசிகர்கள் என்று கூறிக்கொள்ளும் மதவெறியர்கள் சிலர் அர்ஷ்தீப் சிங்கை காளிஸ்தானின் என்றெல்லாம் காட்டமாக விமர்சித்து வந்தனர்.

தென்னாப்பிரிக்கா போட்டி
இந்த நிலையில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா தீபக் சஹார் பந்துவீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அர்ஷ்தீப் பந்துவீச்சு
2 வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங், தான் வீசிய 2 வது பந்திலேயே அந்த அணியின் நட்சத்திர வீரர் குவிண்டன் டீகாக்கிற்கு ஸ்டம்பை பதம் பார்த்தி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அதே ஓவரின் 5 வது பந்தில் தென்னாப்பிரிக்க வீரர் ரொஸ்ஸோவ் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். கடைசி பந்தில் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லரின் ஸ்டம்பையும் தெறிக்கவிட்டார் அர்ஷ்தீப் சிங்.

3 விக்கெட்டுகள்
அர்ஷ்தீப் சிங் வீசிய 2 வது ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் தென்னாப்பிரிக்க அணி நிலைகுலைந்தது. 2 ஓவர்களிலேயே 8 ரன்கள் எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ஆட்டத்தை தக்க வைக்க அந்த அணி நிதானமாக ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. கடைசியில் அந்த அணி 106 ரன்களை மட்டுமே குவித்தது. இந்த இலக்கை இந்திய அணி 17 வது ஓவரிலேயே கடந்து வெற்றிபெற்றது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications