நடிகைக்கு காருக்குள் நேர்ந்த கொடூரம்! மாஸ்டர் ப்ளானே இவங்கதானா? கசிந்த ஆடியோ வம்பாய் சிக்கிய காவ்யா!
திருவனந்தபுரம் : கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவன் மிக முக்கிய பங்காற்றி இருப்பதாக அதிர்ச்சி ஆடியோக்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு, பிரபல மலையாள நடிகை ஒருவர் பணி முடிந்து திரும்பும் போது கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் இருப்பதாக முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் தெரிவித்ததையடுத்து இந்த வழக்கு ஒட்டுமொத்த மலையாள திரையுலகிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

நடிகை பாலியல் வழக்கு
இவ்வழக்கு தொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பை கிளப்பினார் மலையாள இயக்குனரான பாலச்சந்திரன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மலையாள இயக்குனரான பாலச்சந்திரன், நடிகையை பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகளை குற்றவாளிகள் செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் அந்த காட்சிகளை மலையாள நடிகர் திலிப் உள்ளிட்ட அவருக்கு நெருக்கமான சிலர் பார்த்ததாக கூறியிருந்தார்.

நடிகர் திலீப்
மேலும் கைப்பற்றப்பட்ட நடிகர் திலிப்பின் செல்போனில், நடிகை தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், திலீப் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்றதையும் ஊர்ஜிதம் செய்வதற்கான ஆதாரம் உள்ளது. கொலைச் சதி வழக்கு தொடர்பாக இயக்குநர் பாலச்சந்திர குமார் சமர்ப்பித்த குரல் குறிப்புகளும் குற்றப் பிரிவில் உள்ளது. திலீப்பின் போனில் நீதிமன்ற ஆவணங்களின் புகைப்படங்களும் சிக்கின.

மேலும் அதிர்ச்சி
இந்நிலையில் இவ்விவகாரத்தில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் செல்போனிலிருந்து குற்றப்பிரிவு போலிசார் ஒரு வாய்ஸ் மெசேஜை மீட்டெடுத்தது. அதில் நடிகைக்கு எதிராக குற்றத்தைத் திட்டமிட்டது காவ்யா தான் என்று தெரிய வந்துள்ளதாக போலிசார் கூறியுள்ளனர். காவ்யா மாஸ்டர் பிளான் போட்ட நிலையில் அவரது கணவர் திலீப்பும் வெகு காலத்திற்கு பிறகு இதனை செயல்படுத்தியுள்ளார்.

காவ்யா மாதவன் திட்டம்
நடிகர் திலீப்பின் சகோதரியின் கணவர் சூரஜ் என்பவரும் அவரது நண்பர் சரத் என்பவரும் உரையாடும் 3 செல்போன் ஆடியோக்களில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடிகை காவ்யா மாதவனின் தூண்டுதல் இருப்பது அம்பலமாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக சிறப்பு விசாரணைக் குழுவினர் மூன்று செல்போன் ஆடியோக்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும் காவ்யா மாதவன் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications