2 நாள் முன் வந்தனர்.. அபுதாபி, துபாயில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா.. கேரளாவில் புதிய சிக்கல்!
அபுதாபி மற்றும் துபாயில் இருந்து கேரளாவிற்கு சிறப்பு விமானம் மூலம் வந்த 363 பேரில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: அபுதாபி மற்றும் துபாயில் இருந்து கேரளாவிற்கு சிறப்பு விமானம் மூலம் வந்த 363 பேரில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக உலகம் முழுக்க பல்வேறு வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வரும் முடிவில் மத்திய அரசு களமிறங்கி உள்ளது. இதற்காக பெரிய அளவில் வந்தே பாரத் மிஷன் என்ற மீட்பு பணி திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதி தொடங்கிய இந்த மீட்பு பணி 13ம் தேதி வரை நடக்க உள்ளது.

மொத்தமாக 19 லட்சம் இந்தியர்களை மீட்க இந்த திட்டம் போடப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக 2 நாட்களுக்கு முன் கேரளாவிற்கு அபுதாபி, துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கி இருந்த இந்தியர்கள் மீட்கப்பட்டு கேரளா கொண்டு வரப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வந்தே பாரத் மிஷன் மூலம் அபுதாபி மற்றும் துபாயில் இருந்து கேரளாவிற்கு சிறப்பு விமானம் மூலம் வந்த 363 பேரில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் இவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த இரண்டு பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள்.
ஒருவர் கோழிக்கோட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்னொருவர் கொச்சியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் வந்த மற்ற பயணிகள் சிலருக்கு சோதனை செய்யப்பட உள்ளது. ஏற்கனவே இவர்கள் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் என்னிக்கி 505 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் அங்கு 484 பேர் குணப்படுத்தப்பட்டுவிட்டனர்.
இதனால் அங்கு ஆக்ட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது. இதுவரை கேரளாவில் 4 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கேரளாவில் இந்த வாரம் இன்னும் கூடுதலாக 698 பயணிகள் ஐஎன்எஸ் ஜலஷ்வா போர் கப்பல் மூலம் இவர்கள் கொச்சி வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications