போச்சு போங்க.. கேரளா லாட்டரியில் வென்ற ரூ.25 கோடிக்கு வரி, கமிஷன் எவ்வளவு தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி விற்பனை செய்யப்பட்ட திருவோணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசான ரூ.25 கோடியை கோவையை சேர்ந்த நபர் தட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் தான் அவருக்கு வரி, ஏஜென்ட் கமிஷன் போக எவ்வளவு தொகை கையில் கிடைக்கும் என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனை நடைமுறையில் உள்ளது. கேரளாவில் அரசு சார்பிலும், தனியார் நிறுவனங்கள் சார்பிலும் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஓணம் உள்ளிட்ட பண்டிகை காலத்தில் விற்பனை செய்யப்படும் லாட்டரிகளுக்கு அதிகளவிலான பரிசுத்தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கேரளா அரசு சார்பில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.25 கோடி முதல் பரிசுத்தொகையாக அறிவித்து திருவோணம் பம்பர் பிஆர் 93 எனும் லாட்டரி விற்பனையை செய்தது.
இதில் ஒரு லாட்டரி ரூ.500 ஆகும். மொத்தம் 75.76 லட்சம் லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த லாட்டரி சீட்டை கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் வாங்கினார்கள். இந்த லாட்டரிக்கான ரிசல்ட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று லாட்டரிக்கான ரிசல்ட் வெளியானது.
இதில் முதல் பரிசான ரூ.25 கோடியை தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த நடராஜன் வென்றுள்ளார். அவர் வாங்கிய TE 230662 என்ற லாட்டரிக்கு தான் முதல் பரிசு விழுந்துள்ளது. இந்நிலையில் தான் கேரளா லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு வென்ற கோவையை சேர்ந்த நடராஜனுக்கு வரி பிடித்தம் உள்பட எவ்வளவு தொகை கிடைக்கும்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இந்தியாவில் லாட்டரி உள்பட பிற விளையாட்டுகளில் பரிசுத்தொகையாக ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பெற்றால் அதற்கு வரியாக 31.2 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்பாதைய ரூ.25 கோடி லாட்டரி பரிசுத்தொகைக்கான வரி என்பது 31.2 சதவீதமாக உள்ளது. அதன்படி பார்த்தால் லாட்டரி வரியாக அரசுக்கு ரூ.6.75 கோடி செலுத்த வேண்டி இருக்கும்.
மேலும் ஏஜென்ட் கமிஷன் தொகையாக ரூ.2.5 கோடி செலுத்தப்பட வேண்டும். அதோடு லாட்டரி என்பது தனி நபருக்கான அதிர்ஷ்ட வருவாய் என கருதப்படுவதால் கூடுதல் வரியாக (Surchagre) ரூ.2.49 கோடி பிடித்தம் செய்யப்படும். இதுமட்டுமின்றி செஸ் வரியாக 0.37 கோடி(அதாவது ரூ.39 லட்சம்) இப்படியாக மொத்தம் 12.11 கோடி பிடித்தம் செய்யப்படும். இந்த பிடித்தங்கள் போக மீதம் ரூ.12.89 கோடி மட்டுமே ரூ.25 கோடி வென்ற நபருக்கு கிடைக்கும்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications