Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிறிஸ்தவரை மணம் முடித்த தலித் பெண்ணுக்கு ஜாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கிறிஸ்தவரை திருமணம் செய்து கொண்ட தலித் பெண்ணுக்கு சாதிச் சான்றிதழை மறுக்க முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு நபரை வேறொரு சமூகத்துடன் திருமணம் செய்துகொள்வது ஜாதிச் சான்றிதழை வழங்குவதில் எந்த தாக்கமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

கேரளாவில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டதற்காக இந்து-குர்வான் சமூகத்தைச் சேர்ந்த, பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கிராம நிர்வாக அலுவலர் சாதி சான்றிதழ் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார்.

கேரள பெண் வழக்கு

கேரள பெண் வழக்கு

சாதிச் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் வேதனையடைந்த அந்த பெண் கேரள உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ராஜா, கிறிஸ்தவரை திருமணம் செய்து கொண்ட தலித் பெண்ணுக்கு சாதிச் சான்றிதழை மறுக்க முடியாது என்று உத்தரவிட்டார். ஒரு நபரின் சமூகம் அந்த சமூகத்தில் அவள் பிறந்ததன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும், ஒரு நபரை வேறொரு சமூகத்துடன் திருமணம் செய்துகொள்வது ஜாதிச் சான்றிதழை வழங்குவதில் எந்த தாக்கமும் இல்லை என்றும் கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சுட்டிக்காட்டிய நீதிபதி

சுட்டிக்காட்டிய நீதிபதி

ஒரு தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடியினரைச் சேர்ந்த ஒருவர், அவரது திருமணத்திற்குப் பிறகும், அட்டவணையிடப்பட்ட சாதி அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் உறுப்பினராகத் தொடர்வார் என்று 341வது பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட குடியரசுத் தலைவர் அறிவிப்பை நீதிபதி சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் 2.5.1975 அன்று வெளியிட்ட ஜாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களில் அடங்கிய கருத்துக்களையும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

பாதுகாப்பை வழங்குவதாகும்

பாதுகாப்பை வழங்குவதாகும்

341(1) வது பிரிவின் நோக்கம் பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ள பட்டியல் சாதி உறுப்பினர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதாகும் என்றும் நீதிபதி ராஜா குறிப்பிட்டார். னுதாரர் இந்துக் குறவனாகப் பிறந்தவர் என்பதால், அந்த மனுவை நிராகரித்ததில் எதிர்மனுதாரர்கள் தரப்பில் எந்த நியாயமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு ரு நபரின் ஜாதி அல்லது சமூகம் அவர்/அவரது சமூகத்தில் பிறந்ததன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை எதிர்மனுதாரர்கள் கருத்தில் கொள்ளவில்லை.

 கிராம அலுவலரின் தவறான முடிவு

கிராம அலுவலரின் தவறான முடிவு

கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதன் மூலம் மனுதாரர் பட்டியலிடப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்ற உரிமையை இழக்க நேரிடும் என்றும், அவர் பிறந்த சமூகத்தைக் காட்டும் சான்றிதழில் இருந்து விலக்கப்படுவார் என்றும் கிராம அலுவலர் தவறான அடிப்படையில் முடிவெடுத்துள்ளார் என்று கூறிய நீதிபதி, அந்த பெண்ணுக்கு கூடிய விரைவில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தாசில்தார் மற்றும் கிராம அலுவலருக்கு உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+