கிறிஸ்தவரை மணம் முடித்த தலித் பெண்ணுக்கு ஜாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம்: கிறிஸ்தவரை திருமணம் செய்து கொண்ட தலித் பெண்ணுக்கு சாதிச் சான்றிதழை மறுக்க முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு நபரை வேறொரு சமூகத்துடன் திருமணம் செய்துகொள்வது ஜாதிச் சான்றிதழை வழங்குவதில் எந்த தாக்கமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
கேரளாவில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டதற்காக இந்து-குர்வான் சமூகத்தைச் சேர்ந்த, பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கிராம நிர்வாக அலுவலர் சாதி சான்றிதழ் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார்.

கேரள பெண் வழக்கு
சாதிச் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் வேதனையடைந்த அந்த பெண் கேரள உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ராஜா, கிறிஸ்தவரை திருமணம் செய்து கொண்ட தலித் பெண்ணுக்கு சாதிச் சான்றிதழை மறுக்க முடியாது என்று உத்தரவிட்டார். ஒரு நபரின் சமூகம் அந்த சமூகத்தில் அவள் பிறந்ததன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும், ஒரு நபரை வேறொரு சமூகத்துடன் திருமணம் செய்துகொள்வது ஜாதிச் சான்றிதழை வழங்குவதில் எந்த தாக்கமும் இல்லை என்றும் கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சுட்டிக்காட்டிய நீதிபதி
ஒரு தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடியினரைச் சேர்ந்த ஒருவர், அவரது திருமணத்திற்குப் பிறகும், அட்டவணையிடப்பட்ட சாதி அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் உறுப்பினராகத் தொடர்வார் என்று 341வது பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட குடியரசுத் தலைவர் அறிவிப்பை நீதிபதி சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் 2.5.1975 அன்று வெளியிட்ட ஜாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களில் அடங்கிய கருத்துக்களையும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

பாதுகாப்பை வழங்குவதாகும்
341(1) வது பிரிவின் நோக்கம் பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ள பட்டியல் சாதி உறுப்பினர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதாகும் என்றும் நீதிபதி ராஜா குறிப்பிட்டார். னுதாரர் இந்துக் குறவனாகப் பிறந்தவர் என்பதால், அந்த மனுவை நிராகரித்ததில் எதிர்மனுதாரர்கள் தரப்பில் எந்த நியாயமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு ரு நபரின் ஜாதி அல்லது சமூகம் அவர்/அவரது சமூகத்தில் பிறந்ததன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை எதிர்மனுதாரர்கள் கருத்தில் கொள்ளவில்லை.

கிராம அலுவலரின் தவறான முடிவு
கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதன் மூலம் மனுதாரர் பட்டியலிடப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்ற உரிமையை இழக்க நேரிடும் என்றும், அவர் பிறந்த சமூகத்தைக் காட்டும் சான்றிதழில் இருந்து விலக்கப்படுவார் என்றும் கிராம அலுவலர் தவறான அடிப்படையில் முடிவெடுத்துள்ளார் என்று கூறிய நீதிபதி, அந்த பெண்ணுக்கு கூடிய விரைவில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தாசில்தார் மற்றும் கிராம அலுவலருக்கு உத்தரவிட்டார்.
-
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
Savukku Shankar: சவுக்கு சங்கர் நாளைக்குள் சரண் அடைய வேண்டும்.. இல்லையென்றால் கைது செய்யலாம்! ஐகோர்ட் அதிரடி -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications