Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடா... எடி என்று பேசாதீங்க கண்ணியமாக பேசுங்க - காவல்துறைக்கு உத்தரவிட்ட கேரளா ஹைகோர்ட்

மக்களுடன் பழகும் போது கண்ணியமாக இருக்குமாறு காவல்துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பொதுமக்களுடன் பழகும் போது 'எட போடா' மற்றும் 'எட அல்லது எடி' போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறையினருக்கு கேரளா மாநிர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களிடம் பேசும் பேது கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

திருச்சூர் மாவட்டத்தில் காவல்துறையினரின் அத்துமீறல்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது இந்த கவனிப்பு செய்யப்பட்டது. கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்கள் வெளியே வரும் போது சோதனை செய்யும் காவல்துறை அதிகாரிகள் சிலர் தவறாக நடந்து கொண்டதாகவும் மரியாதைக்குறைவாக பேசியதாகவும் மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.

Kerala High Court has ordered the police to speak politely

வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாநில காவல்துறையினருக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தது. நீதிபதி தேவன் ராமச்சந்திரன், கேரள காவல்துறை தலைமை இயக்குனருக்கு முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தார். காவல்துறையினர் பொதுமக்களுடன் பழகும் போது 'எட போடா' மற்றும் 'எட அல்லது எடி' போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

மக்களுடன் பேசும் போது மலையாள பேச்சுவழக்கு மொழியை பயன்படுத்துவதை நிறுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். மக்களை அவமதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் மற்றும் அவர்களுடன் பழகும் போது மிகவும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மலையாள பேச்சு வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு காவல்துறை அதிகாரிகளைக் கேட்குமாறு டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டார் மேலும் மக்களுடன் பழகும் போது போலீசார் கண்ணியமாக இருக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் காவல்துறையினர் பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ பொதுமக்களிடம் நடந்து கொள்ளக்கூடாது என்று காவல்துறை தலைவர் கூறியிருந்தார். கொரோனா லாக்டவுன் காலத்தில் பிற அரசுத் துறைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்துறையினர், உள்ளாட்சி மற்றும் நகராட்சி துறையினர், தூய்மை பணியாளர்கள் போன்றவர்களுடன் வாக்குவாதத்தில்ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

தடியடி நடத்தி அல்லது பலப்பிரயோகம் செய்து கூட்டத்தைக் கலைப்பது போன்ற காரியங்களில் எந்த சூழ்நிலையிலும் ஈடுபடக் கூடாது. பொதுமக்களை கண்ணியமான முறையில் அறிவுறுத்தி அவர்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும். வணிகர்கள், சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோரிகளிடம் கனிவான முறையில் நடந்துகொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பின்பு அவர்களிடம் வியாபாரத்தை முடித்துக்கொள்ளுமாறு கண்ணியமான முறையில் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+