வெற்றினும் சொல்லிட முடியாது... தோல்வினும் சொல்லிட முடியாது... திரிசங்கு நிலையில் காங்கிரஸ்..!
திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ள இடங்களை வைத்து அது பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது என்றும் சொல்ல முடியாது தோல்வியை தழுவிவிட்டது எனவும் கூற முடியாது.
கிராம பஞ்சாயத்துக்களை பெரியளவில் கோட்டைவிட்ட காங்கிரஸ் கூட்டணி நகராட்சிகளை ஓரளவு கணிசமான எண்ணிக்கையில் கைப்பற்றியுள்ளது.
இதேபோல் 6 மாநகராட்சிகளில் 3 மாநகராட்சிகளை வென்று ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

கேரளா ஸ்பெஷல்
கேரள மாநிலத்தை பொறுத்தவரை தேசியளவில் ஸ்பெஷல் கவனத்தை ஈர்த்துள்ள மாநிலம் என்றே சொல்லலாம். காரணம் அங்கிருந்து தான் ராகுல்காந்தி நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதைத்தவிர அங்கு களப்போட்டி எப்போதும் எல்.டி.எஃப்.- யு.டி.எஃப். என்கிற ரீதியில் தான் இருக்கும் . ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியான பாஜக அந்த இரு கூட்டணிகளுக்கும் கடும் போட்டியை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

காங்கிரஸ் கூட்டணி
கேரளாவில் உள்ள 86 நகராட்சிகளில் 45-க்கும் மேற்பட்ட நகராட்சிகளை காங்கிரஸ்-முஸ்லீம் லீக் கட்சிகள் உள்ளடங்கிய யுடிஎஃப் கூட்டணி கைப்பற்றியுள்ளது. இது ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு லேசான சறுக்கலாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதேவேளையில் கிராமப்பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல், என எடுத்துக்கொண்டால் அங்கு காங்கிரஸ் கூட்டணி சிறிய பின்னடைவை தான் சந்தித்திருக்கிறது.

சரிசமம்
திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு ஆகிய மூன்று மாநகராட்சிகளையும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கைப்பற்றவுள்ளது. அதற்கு சற்றும் சளைக்காத வகையில் கொச்சி, திருச்சூர், கன்னூர் ஆகிய மூன்று மாநகராட்சிகளையும் காங்கிரஸ்-முஸ்லீம் லீக் கூட்டணி கைப்பற்றுகிறது. இதனால் மாநகராட்சிகளை பொறுத்தவரை இரண்டு கூட்டணிகளுக்கும் சமபலம் இருப்பதாகவே கருதலாம்.

கழுத்துப்பிடி போட்டி
இன்று வெளியாகியுள்ள கேரள உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் எதை உணர்த்துகிறது என்றால், அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மிக மிக கடுமையான போட்டி உருவாகக் கூடும் என்பதை உணர்த்துகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் கரணம் தப்பினால் மரணம் என்கிற அளவுக்கு கம்யூனிஸ்ட்களுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் கழுத்துப்பிடி போட்டி இருக்கும் என்பது இப்போதே தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதனால் சட்டமன்றத் தேர்தலில் பெற வேண்டிய வெற்றியை இலக்காக கொண்டு அடுத்த ஓட்டத்தை எல்.டி.எஃப்.-யு.டி.எஃப் தலைவர்கள் தொடங்கியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications