இடதுசாரிகளிடமிருந்து பந்தளம் நகராட்சியை கைப்பற்றிய பாஜக.. சபரிமலை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி?
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு உள்ளே பெண்களை அனுமதிக்க கூடாது என்று தீவிரமாக பாஜக போராட்டம் நடத்தியதற்கு தேர்தலில் பலன் கிடைத்துள்ளது. பந்தளம் நகராட்சி தேர்தலில் பாஜக வென்றுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து கேரள பாஜக சார்பில் தீவிரமாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்த பெண்கள் ஆங்காங்கு விரட்டியடிக்கப்பட்டனர். இந்த போராட்டங்களின் மூலம் கேரளாவில் உள்ள இந்துக்களை ஒருங்கிணைத்து தேர்தலின் போது அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்று பாஜக நினைப்பதாக இடதுசாரிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
இருப்பினும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது, கேரளாவில் பாஜக வெல்ல முடியவில்லை. ஆனால் கேரள உள்ளாட்சித் தேர்தலின்போது பந்தளம் நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 17 வார்டுகளை பாஜக வென்றுள்ளது. இதன் மூலம், இடதுசாரி கூட்டணியிடமிருந்து நகராட்சியை கைப்பற்றியுள்ளது.
பந்தளராஜா குடும்பத்தினர் வசிக்கக்கூடிய நகரம் பந்தளம். சபரிமலை ஐயப்பன் கோவிலின் ராஜ குடும்பத்திற்கும், பந்தள ராஜா குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
சுவாமி ஐயப்பன் பந்தள மன்னர்களின் ராஜ வம்சத்தில் பிறந்திருந்தாலும் அவருக்கு அந்த ராஜ வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதால் சபரி மலைக்கு சென்று இருந்து கொண்டார். எனினும் அவர் தந்தையின் ஆசைக்காக வருடத்தில் ஒரு நாள் மட்டும் இளவரசன் கோலம் சூடிக்கொள்வதாக தன் தந்தையிடம் தெரிவித்தார். அந்த சம்பிரதாயம் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் முடிவை பந்தள ராஜா குடும்பமும் ஏற்க மறுத்து வருகிறது. இதை எல்லாம் வைத்து பார்த்தால் ஐயப்பன் கோவில் தொடர்பாக நடந்த போராட்டத்திற்கு பந்தளத்தில் பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications