பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் உடனடி நிதி, ரூ.2,000 மாத உதவித்தொகை - பினராயி விஜயன்
திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலையின் வீரியம் சற்று குறைந்துள்ளது. ஆனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

பல்வேறு இடங்களில் கொரோனா தொற்று காரணமாக தாய், தந்தை இறந்து விடுவதால் அவர்களின் குழந்தைகள் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கும் அவல நிலை நீடித்து வருகிறது. இந்த குழந்தைகளின் நிலையை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் இவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஏற்கனவே ஹரியானா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் பெற்றோரை இழந்து அனாதையாக நிற்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி, மாத ஊக்கதொகை வழங்குவது குறிதது அறிவித்துள்ளன. இந்த நிலையில் நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம் நிவராண நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் உடனடி நிவாரணமாக வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு 18 வயதாகும் வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும். பட்டப்படிப்பு வரையிலான அவர்களின் முழு கல்விச் செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications