ஜப்தி நோட்டீஸ் அனுப்பிய அடுத்த நொடியில் யோகம்.. லாட்டரி பரிசால் ஒவர் நைட்டில் ஒபாமாவான மீன் வியாபாரி
திருவனந்தபுரம்: கேரளாவில் வீட்டு லோனை கட்ட முடியாமல் தவித்த மீன் வியாபாரிக்கு ஜப்தி நோட்டீஸ் கிடைத்த சில மணி நேரங்களில் ரூபாய் 70 லட்சத்துக்கான லாட்டரி பரிசுத்தொகையும் கிடைத்ததால் மீன் வியாபாரி ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார்.
கேரளாவில் கடந்த ஓணம் பண்டிகை பம்பர் லாட்டரி சீட்டில் 25 கோடி ரூபாய் முதல் பரிசை அனூப் என்ற ஆட்டோ டிரைவர் தட்டி சென்றார்.
ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலம் ஆன அனுப் அதன் பிறகு நிம்மதி இன்றி தவிப்பதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு புலம்பியது எல்லாம் வேற கதை..

ஒரே நாளில் கோடீஸ்வரர்
ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டான் என்று சொல்வார்களே அதுபோல ஒரே நாளில் ரூபாய் 25 கோடி பரிசை தட்டி சென்று அனுப் பலரையும் பொறாமை பட வைத்து விட்டார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அனுப் பற்றிய பேச்சுக்களும் அவருக்கு அடித்த அதிர்ஷ்டம் பற்றிய பேச்சுக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. இந்த சம்பவம் நடைபெற்று சில வாரங்களே ஆகியிருக்கும் நிலையில் கேரளாவில் லாட்டரி சீட்டு மூலம் மீன் வியாபாரி ஒருவருக்கு 70 லட்சம் பரிசுத்தொகை கிடைத்து உள்ளது.

வங்கி அனுப்பிய ஜப்தி நோட்டீஸ்
இத்தனைக்கும் வாங்கிய கடனை கட்ட முடியாமல் வங்கி அனுப்பிய ஜப்தி நோட்டீஸ் கிடைத்த சில மணி நேரங்களில் பரிசுத்தொகையும் விழுந்து இருக்கிறது. வங்கி நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்து கவலையில் மூழ்கியிருந்த சில மணி நேரத்தில் லாட்டரி சீட்டு மூலம் பணம் கொட்டும் என தெரியவந்து இருப்பதால் தற்போது மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியுள்ளார். கொல்லம் மாவட்டம் மைநாகப்பள்ளியை சேர்ந்த் பூக்குஞ்சு (வயது 40) என்பவருக்குதான் இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

9 லட்சம் ரூபாய் கடன்
பைக்கில் சென்று வீதி வீதியாக மீன் வியாபாரம் செய்து வருகிறார். அதிர்ஷ்டம் நமக்கும் அடிக்காதா? என்ற ஏக்கத்தில் லாட்டரி சீட்டுக்களை வாங்கி குவிக்கும் பழக்கம் பூக்குஞ்சுவிற்கு இருந்து இருக்கிறது. ஏராளமான கடன்களும் இருந்ததால் வீட்டை அடைமானம் வைத்து வங்கியில் 9 லட்ச ரூபாய் கடனும் வாங்கியிருந்து இருக்கிறார். இந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால் வங்கி ஜப்தி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

வங்கியில் டெபாசிட் செய்ய போவதாக..
ஆனால், இந்த நோட்டீஸ் வந்த சில மணி நேரங்களில் அக்ஷயா லாட்டரியின் குலுக்கல் முடிவு வந்துள்ளது. இதில் முதல் பரிசான 70 லட்சம் பூக்குஞ்சுவிற்கு கிடைத்துள்ளது. இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்துள்ளார் பூக்குஞ்சு. தற்போது கிடைத்துள்ள ரூபாய் 70 லட்சத்தை வைத்து கடனை அடைத்து விட்டு மீதி பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய போவதாக மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் பூக்குஞ்சு.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications