போடி டூ மூணாறு.. வேறலெவலில் மாறிய கடவுள் தேசத்தின் நுழைவு வாயில்.. மிகப்பெரிய குட்நியூஸ்
தேனி : தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் போடியில் இருந்து கேராளவின் மூணாறு வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மூணாறு-போடிமெட்டு இருவழிச்சாலை விரிவாக்க பணி நிறைவடைந்துள்ளதால், வரும் ஆகஸ்ட் 17-ந்தேதி அன்று நிதின் கட்காரி திறந்து வைக்கிறார்.
தேனி மாவட்டம் வழியாக கேரளா சென்றால், இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம். போடி மெட்டு வழியாக மூணாறு அடைந்த அங்கிருந்து கொச்சி சென்றால், கேரளாவை ஏன் கடவுளின் தேசம் என்று எல்லோரும் சொல்கிறார்கள் என்பதை நிச்சயம் அறிய முடியும்.

அதேநேரம் இடுக்கி மாவட்டம் மூணாறு முதல் போடிமெட்டு வரையில் உள்ள கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மிக குறுகிய சாலையாக இருந்தது. இந்த சாலையை நல்ல அகலமான மழைநீர் வடிகாலுடன் கூடிய இருவழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
கடந்த 2017-ம் ஆண்டு இதற்கானபணிகள் தொடங்கியது. மூணாறு-போடிமெட்டு இடையே சுமார் 42 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணிக்கு ரூ.381. 76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சாலையில் ஒரு இடத்தில் சுங்கச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. லாக்காடு என்ற இடத்தில் சுங்கச்சாவடியும் மைக்கப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்க பணிகள் 3 ஆண்டுகளில் முடிந்திருக்க வேண்டிய நிலையில், லாக்காடு, கேப்ரோடு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலை விரிவாக்க பணியை மேற்கொள்வது பெரும் சவாலாக இருந்தது. குறிப்பாக 2018ம் ஆண்டு பெய்த பேய்மழை மூணாறு பகுதியை மொத்த புரட்டி போட்டிருந்தது. கடும் சவால்களுக்கு நடுவில் இருவழிப்பாதையாக போடி மெட்டு மூணாறு பாதை மாறி உள்ளது. ஏற்கனவே போடி மெட்டு முதல் தேனி வரை சாலை மிக அருமையாக இருக்கும். இப்போது இந்த சாலை பணிகளும் நிறைவு பெற்றுள்ளதால், கடவுளின் தேசத்து நுழைவு வாயில் வேறலெவலில் மாறி உள்ளது.
போடி மெட்டு மூணாறு பாதை பணிகள் முடிந்துவிட்டதால் இந்த இருவழிச்சாலையை வருகிற ஆகஸ்ட 17-ந்தேதி திறக்கப்படுகிறது. மூணாறில் சாலை திறப்பு விழா நடைபெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்துகொண்டு, போடி மெட்டு மூணாறு சாலையை திறந்து வைக்கிறாராம்.
இந்த பணிகள் முடிந்துவிட்டதால் அடுத்ததாக மூணாறில் இருந்து எர்ணாகுளம் வரையிலான உள்ள கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையிலும் இருவழிச்சாலையாக மாற்றப்படுகிறது. அதன்படி மூணாறு-எர்ணாகுளம் இடையே 124 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்க பணிக்கு மத்திய அரசு ரூ.910 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்காக சாலையை அகலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நேரியமங்கலத்தில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் வருகிற 17-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இந்த பணியையும் தொடங்கி வைக்க உள்ளார்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications