கரூர் வழக்கில் வளைக்கப்பட்ட விஜய்.. சிபிஐ பொதுவாக ஒரு வழக்கை எப்படி விசாரிக்கும்? Method என்ன?
சென்னை: கரூர் வழக்கில் இன்று சிபிஐ விஜயை விசாரணை செய்கிறது. தவெக மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விஜய் மீது விசாரணை செய்யப்படுகிறது. இந்த விசாரணையை எப்படி நடத்துவார்கள்.. என்னென்ன கேள்விகள் எழுப்புவார்கள் என்று விசாரிப்பார்கள் என்று இங்கே பார்க்கலாம்.
மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முக்கியத்துவம் வாய்ந்த அல்லது சிக்கலான குற்ற வழக்குகளை எவ்வாறு ரகசியமாக விசாரிக்கிறது என்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கும், விசாரணையின் ரகசியத்தன்மையைக் காப்பதற்கும் சிபிஐ பயன்படுத்தும் இம்முறைகள் சட்டபூர்வமான நடைமுறைகளாகும்.

விசாரணைக்கென, நம்பகமான, மூத்த அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறிய குழுவே நியமிக்கப்படும். கோப்புகள் மற்றும் விவாதங்களுக்கான அணுகல் கசிவுகளைத் தவிர்க்கக் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.
தனி டீம்
physical ஆக உள்ள கோப்புகள் சீலிடப்பட்டு பாதுகாப்பாகச் சேமிக்கப்படுகின்றன. டிஜிட்டல் பதிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட கணினி அமைப்புகளில் சேமிக்கப்படும்.
ஆவணங்கள், தொலைபேசி அழைப்புப் பதிவுகள், நிதித் தரவுகள், சிசிடிவி காட்சிகள் போன்ற அனைத்து ஆதாரங்களும் ஒரே பாதுகாப்பான இடத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அவற்றிற்கிடையே உள்ள தொடர்புகள் மற்றும் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.
பொதுவாக பெரிய கிரைம் வழக்கில் சாட்சிகள் ஒரு திட்டமிட்ட வரிசையில் விசாரிக்கப்படுவர். இதனால், முந்தைய வாக்குமூலங்கள் அதற்கு பிந்தைய வாதங்களால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன. வாக்குமூலங்கள் ரகசியமாகச் சரிபார்க்கப்படுகின்றன.
தடயவியல் ஆய்வு சோதனைகள்
சைபர், நிதி, மருத்துவம், கையெழுத்து மற்றும் குரல் பகுப்பாய்வு போன்ற தடயவியல் ஆய்வகங்களின் முடிவுகள், இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் சிபிஐயின் நிபுணர்களால் உன்னிப்பாக ஆய்வு செய்யப்படுகின்றன.
தொலைபேசிகள், மின்னஞ்சல்கள், கிளவுட் தரவுகள், நீக்கப்பட்ட கோப்புகள், ஐபி பதிவுகள் மற்றும் மெசேஜிங் ஆப்ஸ்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, வழக்கு தொடர்பான காலவரிசை மற்றும் தகவல் தொடர்பு சங்கிலிகள் மீட்டுருவாக்கம் செய்யப்படும்.
வங்கி கணக்குகள், ஷெல் நிறுவனங்கள், சொத்துப் பதிவுகள், பினாமி பரிவர்த்தனைகள் மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, வழக்கின் நோக்கம் மற்றும் பலனடைந்தவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.
சந்தேக நபர்கள் தனித்தனியாக, சில சமயங்களில் பலமுறை, விசாரிக்கப்படுவர். இதில் முரண்பாடுகள், காலவரிசை மற்றும் ஆதார அழுத்தங்கள் பயன்படுத்தப்படும்; ஆனால், உண்மைகள் முழுமையாக வெளிப்படுத்தப்படாது.
ஒவ்வொரு நடவடிக்கை கட்டத்திலும், ஆதாரங்கள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாகவும், நடைமுறைகள் சட்டத்திற்கு இணங்குபவையாகவும் இருப்பதை உறுதி செய்ய மூத்த சட்ட அதிகாரிகள் சரிபார்க்கிறார்கள்.
கண்டறியப்பட்ட தகவல்கள் அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றங்கள் அல்லது அதிகாரிகளுடன் மட்டுமே பகிரப்படும். ஊடகங்களுக்கான தகவல்தொடர்புகள் மிகக் குறைவாகவும், கவனமாக வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டும் இருக்கும்.
வழக்குகளில் விசாரிக்கப்படும் பெரிய நபர்கள் பொதுவாக தனி அறையில், போதிய வசதிகள் வழங்கப்பட்டு அதற்கு இடையே விசாரணை செய்யப்படும். பொதுவாக விசாரணை ரகசியமாக மேற்கொள்ளப்படும்.
விஜய் விசாரிக்கப்படும் method?
சிபிஐ கரூர் வழக்கில் விஜயை தனியாக வைத்து ரகசிய அறையில் விசாரிக்கிறது. இது ரகசிய விசாரணை method ஆகும். சிபிஐ இந்த ரகசிய விசாரணை முறைகளைப் பயன்படுத்துவதன் முக்கிய நோக்கங்கள்
ஆதாரங்கள் அழிக்கப்படுவதைத் தடுத்தல்.
சாட்சிகளைப் பாதுகாத்தல்.
அரசியல் அல்லது ஊடக அழுத்தங்களைத் தவிர்த்தல்.
நீதிமன்றத்தில் உறுதியான, பலமான வழக்குகளை உருவாக்குதல் போன்ற காரணங்களை மனதில் வைத்து தனி அறையில் விசாரிக்கப்படும்.
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய் டெல்லி சென்றுள்ளார். இன்று அவர் கரூர் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையில் ஆஜராக உள்ளார். இந்த நிலையில்தான் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தலைகள் செய்த செயல் ஒன்று பாஜக தரப்பை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளதாம்.
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. தவெக தரப்பு எதிர்பார்த்ததை விட.. இதில் சிபிஐ கடுமை காட்டி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் வழக்கில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள்.
இதற்கு சில பெரிய அரசியல் வழக்குகள், நாட்டை உலுக்கிய வழக்குகளில் காட்டிய அதே கடுமையான போக்கை இந்த வழக்கிலும் சிபிஐ கடைபிடிப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிஐ வசம் போனால்.. வழக்கு அப்படியே அமுங்கிவிடும்.. பொறுமையாகவே நகரும் என்று சிலர் வாதங்களை வைத்தனர். ஆனால் எதிர்பார்க்காத வண்ணம்.. இந்த முறை சிபிஐ மிக "சீரியஸ்" முறையை இந்த வழக்கில் கடைப்பிடித்து வருகிறது.
-
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்! -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
விஜய் பெயரளவில் தான் கிறிஸ்தவர்.. சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர்.. அருட்தந்தை விமர்சனம்! -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
சென்னையில் விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. வில்லிவாக்கம் செல்லாமல் வீடு திரும்புகிறார் -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா?












Click it and Unblock the Notifications