அன்பழகன் வழக்கில் ஏப்.15-ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு! அதுவரை ஜெ. அப்பீல் வழக்கில் தீர்ப்புக்கு தடை
டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவதை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது ஏப்ரல் 15-ந் தேதியன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. அதுவரை மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர்.

இம்மனு மீதான விசாரணைகள் முடிவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க.பொதுச்செயலர் அன்பழகன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் மதன் லோகுர், பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. இம்மனு மீதான விசாரணைகள் அனைத்தும் இன்றுடன் நிறைவடைந்தன.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 15-ந் தேதியன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் ஏப்ரல் 15-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதால் அதுவரை ஜெயலலிதா உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கவும் இடைக்கால தடை விதித்தனர் நீதிபதிகள்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications