ஆளுநரை பதவி நீக்கம் செய்ய டெல்லி சட்டசபையில் அதிரடி தீர்மானம்! கேஜ்ரிவால் அரசு தடலாடி!!
டெல்லி: ஆளுநரை பதவி நீக்கம் செய்யும் வகையிலான அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி டெல்லி சட்டசபையில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. இதில் அதிகாரிகள் நியமனம், பொது ஒழுங்கு, போலீஸ் உள்ளிட்டவற்றில் டெல்லி ஆளுநருக்குத்தான் அதிகாரம் உண்டு என்று மத்திய அரசு கடந்த 21-ந் தேதி அறிவித்து,

இது தொடர்பாக அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிக்கைக்கு கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில், அனில்குமார் என்ற போலீஸ் ஏட்டு லஞ்ச வழக்கில் கைதாகி கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
அவருக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், டெல்லி அரசின் கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, போலீசாரை கைது செய்கிற அதிகாரம் உண்டு என கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அந்த தீர்ப்பில் மத்திய அரசு, டெல்லி மாநில அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் ஆகியோரின் அதிகார வரம்பு குறித்து ஆராயப்பட்டுள்ளது.
தீர்ப்பில், மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப்பட்டியலின்படி, சட்டங்களை இயற்றுகிற அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு, குற்றவியல் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றில் துணை நிலை ஆளுநர் தன் விருப்பம் போல செயல்பட முடியாது. அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் செயல்பட முடியும் என கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை முதல்வர் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தலைமை செயலாளர் கே.கே.சர்மா ஆகியோருடன் சென்று நேற்று காலை சந்தித்தார்.
இந்த சந்திப்பு 20 நிமிடம் நடந்தது. இருவருக்கும் இடையே மோதல் போக்கு வெடித்த நிலையில் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை கேஜ்ரிவால் சந்தித்தது இதுவே முதல் முறை ஆகும்.
இதைத் தொடர்ந்து டெல்லி சட்டசபையின் 2 நாள் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இக் கூட்டத்தில், துணை ஆளுநர் கவர்னர் நஜீப் ஜீப் ஜங்கை பதவி நீக்கம் செய்ய அரசியல் சாசன சட்டத்தின் 155-வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரி அதிரடி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் ஆதர்ஷ் சாஸ்திரி கொண்டு வந்தார். ஆனால் இது அரசியல் சாசன நெருக்கடியை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டசபையில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றொரு தீர்மானம் கொண்டு வந்தார். இத்தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட உள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications