எங்கே நிரூபிச்சிக் காட்டுங்க பாப்போம்.... அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சவால்!!
டெல்லி: மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தொடர்பாக குற்றம் சாட்டும் கட்சிகள், தலைவர்கள் அதை நிரூபிக்க முடியுமா என தேர்தல் ஆணையம் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது.
இந்திய தேர்தல்களில் இப்போது வாக்குப்பதிவுக்கு மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஏற்கெனவே புரோக்கிராமிங் செய்யப்பட்டவை என்பதால், ஆளுங்கட்சிக்கு சாதகமாக வாக்குகள் விழும்படி தொழில்நுட்ப மோசடி நடந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

குறிப்பாக இந்த ஆண்டு இத்தகைய குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளதோடு, அடியோடு இந்த எந்திரங்களை ஒழித்துவிட்டு, வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடமும் காங்கிரஸ், சமாஜ்வாதி, த்ரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 16 முக்கிய எதிர்க்கட்சிகளும் புகார் அளித்துள்ளன.
இதனால், மின்னணு எந்திரங்கள் மூலம் மத்திய / மாநில ஆளும் கட்சிகளுக்கு சாதகமாக தில்லுமுல்லு நடக்கிறதோ என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்துள்ளது.
தேர்தல் ஆணையம் சவால்
இந்த நிலையில் தேர்தல் மின்னணு எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாக கட்சிகள் நிரூபிக்க 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது தேர்தல் ஆணையம். மே மாதம் முதல் தேதியிலிருந்து தொடர்ந்து 10 நாட்களுக்குள் துறை சார் நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகளைக் கொண்டு இந்த மின்னணு எந்திரங்களைச் சோதனையிட்டு, அதில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பிருப்பதை நிரூபித்துக் காட்டட்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. உபி மாநில தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு எந்திரங்களும் இந்த சோதனைக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications