வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேட்டை நிரூபிக்க தயாரா.. தொடங்கியது தேர்தல் ஆணையத்தின் சவால்
வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேட்டை நிரூபிக்க தயாரா என்ற தேர்தல் ஆணையத்தின் சவாலை இரு கட்சிகள் ஏற்ற நிலையில் அதற்கான சோதனைகள் இன்று தொடங்கியது.
டெல்லி: வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேட்டை நிரூபிக்க முடியும் என்ற சவாலை இரு கட்சிகள் எதிர்கொண்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் டெல்லி தேர்தல் ஆணையத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது.
இந்த ஆண்டு உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக 312 இடங்களில் அபாரமாக வெற்றி பெற்றது.
இதேபோல் உத்தரகண்ட்டிலும் பாஜக அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, வாக்குப் பதிவு எந்திரங்களில் எந்த பொத்தானை அழுத்தினாலும் அது பாஜகவுக்கு வாக்களிக்கும்படி முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சிகள் கைகோர்த்தன
இதைத் தொடர்ந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பிற எதிர்க்கட்சிகளும் கைகோத்து கொண்டன. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை தொடர்பாக தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

கட்சிகளுக்கு சவால்
இந்த முறைகேட்டை தவிர்க்க வாக்குச் சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து எந்திரத்தை ஹேக் செய்வது தொடர்பாக நிரூபிக்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நேரடியாக சவால் விடுத்தது.

ஜூன் 3-இல் சவால்
இதைத் தொடர்ந்து ஜூன் 3-ஆம் தேதி டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் வாக்குப் பதிவு எந்திரங்கள் மீது சோதனைகள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் பங்கேற்று நிரூபிக்க அரசியல் கட்சிகள் முன்னரே பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இரண்டு கட்சிகள் மட்டுமே
தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் மட்டுமே சவாலில் பங்கேற்க பதிவு செய்துள்ளன. அதன்படி இன்று தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு எந்திரங்கள் மீதான சோதனை தொடங்கியது. இது பிற்பகல் 2 மணிக்கு முடிவடையும். இதுபோன்ற சவாலை கடந்த 2009-ஆம் ஆண்டும் தேர்தல் ஆணையம் விடுத்தது. ஆனால் யாராலும் மின்னணு ஒட்டுப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications