சசிகலாவை சந்திக்க முதல்முறையாக அனுமதி மறுப்பு... அப்படியே ஷாக்கான தினகரன்
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு முதல் முறையாக அனுமதி மறுக்கப்பட்டது.
பெங்களூர் சிறையில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக சிறை துறை டிஐஜியாக ரூபா அம்பலத்தினார். மேலும் சசிகலாவும், இளவரசியும் ஷாப்பிங் சென்றுவிட்டு ஹாயாக வரும் வீடியோ காட்சிகளு்ம வெளியாகின.

மேலும் சசிகலாவை அதிகமான பார்வையாளர்கள் சந்திக்க அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்கள் பெரும்பாலும் நேரம் தவறியே வந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
சிறை முறைகேட்டில் தொடர்புடைய இரு அதிகாரிகளும், அதை அம்பலப்படுத்திய பெண் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டனர். சிறை முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற அதிகாரி வினய் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த புகார்களுக்கு பிறகு, முதல்முறையாக சசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூர் புறப்பட்டார். அங்கு சிறைக்கு சென்ற அவரது காரை 500 மீட்டர் தூரத்திலேயே நிறுத்துமாறு காவலர்கள் கூறியதால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பிறகு நடந்தே சிறை உள்ள வளாகத்துக்குள் சென்றார். அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பொதுவாக சிறை கைதிகளை அவர்களது உறவினர்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தான் சந்திக்க முடியும்.
ஆனால் தினகரன் நேரம் தவறி வந்ததால் அவருக்கு முதல் முறையாக அனுமதி மறுக்கப்பட்டது. சிறையில் நடந்த முறைகேடுகள் அம்பலமானதால், விதிமுறைகளில் அதிகாரிகள் சமரசம் செய்து கொள்ளவில்லை. இதனால் அரை மணி நேரம் காத்திருந்து விட்டு சென்றுவிட்டார். இது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications