தமிழக வன்முறை.. தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கேட்கிறது மத்திய அரசு
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி வருவதால் ஆங்காங்கே அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக தலைமைச் செயலாளரிடம் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்
டெல்லி: தமிழகம் முழுவதும் ஏழாவது நாளாக இன்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், இன்று போராட்டத்தை கைவிட வேண்டும் என போலீசார் வற்புறுத்தியும் போராட்டக்காரர்கள் மறுத்த காரணத்தால் அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி வருகிறது. சில இடங்களில் கண்ணீர் புகை குண்டு வீசினார்கள்.
போலீசார் நடத்திய தடியடியில் சென்னை, மதுரை, அலங்காநல்லூர், கோவை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் சென்னையில், திருவல்லிக்கேணியில் மர்மநபர்கள் தீயிட்டு கொளுத்தினார்கள். அதைத் தொடர்ந்து சில இடங்களில் டயர்களில் தீவைத்துக் கொளுத்தினார்கள். இப்படி தீவைப்பு, தடியடி, கல்லெறிதல் என தமிழ்நாடு போர்க்களமாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் சூழ்நிலைகளையும் கலவரங்களையும் சட்டம் ஒழுங்கு நிலையையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழக தலைமைச் செயலாளரிடம் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிலைமை சீரடையவில்லை எனில், மத்திய பாதுகாப்பது படை அனுப்பப்படும் என்றும் அதற்காக படைகள் தயாராக உள்ளன எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு துரித கதியில் மத்திய படைகளை அனுப்பி ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களைத் தடுப்பதாக கூறி ஆதிக்கம் செலுத்த துடிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications