மானசரோவருக்கு புனித யாத்திரை சென்ற இந்தியர்கள்.. திடீரென அனுமதி மறுத்து தடுத்து நிறுத்திய சீனா
கவுகாத்தி: கைலாஷ் மானசேரோவருக்கு புனித யாத்திரை மேற்கொள்ள சென்ற 50 இந்திய யாத்ரீகர்களுக்கு சீனா திடீரென அனுமதி மறுத்துள்ளது.
இமயமலை தொடரில் கைலாஷ்- மானசரோவரில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 6, 638 மீ உயரத்தில் உள்ள இங்கிருந்து தான், சிந்து, சட்லெச், பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகள் உற்பத்தியாகின்றன.

கைலாஷ்- மானசரோவர் கோவிலுக்கு வருடந்தோறும் புனிதப் பயணம் மேற்கொள்வது இந்துக்களின் வழக்கம். இதற்காக ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்திய அரசு அனுமதி வழங்குகிறது. இந்நிலையில் யாத்திரை மேற்கொள்பவர்கள் இந்திய- சீன எல்லையின் சிக்கிம் மாநிலம் சென்று நாதுலா கணவாய் வழியாக செல்ல சீனா அரசு அனுமதியளித்திருந்தது.
இதன்படி இந்த ஆண்டு இந்திய யாத்ரீகர்கள் 50 பேர் முதல் பேட்ஜாக கடந்த ஜூன் 16-ம் தேதி கைலாஷ் மானசரோவர் யாத்திரை புறப்பட்டனர். இவர்கள் சீனாவின் நாதுலா கணவாய் வழியாக இப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு சிக்கிம் மாநிலம் சென்று அங்கிருந்து சீனாவின் நாதுலா கணவாய் சென்றனர். அப்போது சீன அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர். இதனால் கடந்த ஒரு வாரமாக யாத்ரீகர்கள் அங்கேயே முடங்கியுள்ளனர்.
மேலும் இரண்டாம் கட்டமாக புறப்பட்ட மேலும் சில இந்திய யாத்ரீகர்கள் சிக்கிம் மாநில தலைநகர் காங்டாங் நகரிலேயே தடுத்த நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு கைலாஷ் - மனோசரோவர் செல்வதற்கு 1,400 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications