வருமான வரி கட்டவில்லை என்றால் இவையெல்லாம் இனி ''கட்"
டெல்லி: வரி செலுத்துவதற்கு வசதி இருந்தும் வரி கட்டாமல் ஏமாற்றுபவர்களின் நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் எல்பிஜி மானியத்தை முடக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
வரி ஏய்ப்பு மற்றும் ஏமாற்றுதல் போன்ற நடவடிக்கைகளை தடுக்க இந்த ஆண்டு முதல் இந்த நடவடிக்கைகள் எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரி ஏய்ப்பை பெருமளவில் தடுக்க முடியும் என வருமான வரித்துறை கருதுகிறது.

எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது தொடர்பான வரைவு திட்ட அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முதல் கட்டமாக வரி கட்டாதவர்களின் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) முடக்குவது. இதன் மூலம் அவர்கள் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவது முற்றிலும் தடுக்கப்படும் சூழல் ஏற்படும்
வாராக் கடனை செலுத்தாதவர்களின் கணக்குகள் எந்த அடிப்படையில் கையாளப்படுமோ அதேபோல `பான்' எண் முடக்கப்பட்டவர்களின் சேமிப்புக் கணக்கும் கையாளப்படும். இது தவிர பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் சமையல் எரிவாயு மானியத்தை இதுபோன்ற வரி கட்டாதவர்களின் கணக்கில் செலுத்தாமல் திரும்பப் பெறலாம் என நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
வரி கட்டாமல் ஏமாற்றம் செய்வோரை தண்டிக்கும் விதமாக இத்தகைய நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. யார் வரி செலுத்தவில்லையோ அவர்களது பான் எண்கள் பத்திரப் பதிவுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். வரி கட்டாமல் சொத்துக்கள் வாங்கி பதிவு செய்ய வரும்போது இவர்கள் கையும், களவுமாக பிடிபடுவார்கள் என்பது வருமான வரித்துறையின் திட்டம்.
மேலும், வரி செலுத்தாதவர்கள் பற்றிய விவரங்கள் வரித்துறை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் வரி செலுத்தாதவர்களின் கடன்கள் மற்றும் அரசு மானியங்கள் முடக்கப்படும்.
சிபில் (சிஐபிஐஎல்) அமைப்புடன் இணைப்பு ஏற்படுத்தி கடன் செலுத்தாதவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் முறையாக வரி கட்டாமல் ஏமாற்றுபவர்களினஅ எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications