கூட்டுறவு கடன் தள்ளுபடி.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு.. விவசாயிகள் அதிர்ச்சி
கூட்டுறவு கடன் தள்ளுபடிக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: கூட்டுறவு வங்கி விவசாய கடன் தள்ளுபடி உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கி விவசாயக் கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. 5 ஏக்கர் வரை வைத்திருப்போரின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்வதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே 5 ஏக்கருக்கு மேல் வைத்திருந்தாலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட சிறு, குறு விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடன் தள்ளுபடிக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.