For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாமீன் கிடைக்குமா? இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார் டிடிவி தினகரன்!

இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்ப்பட்டுள்ள டிடிவி தினகரன் இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்ப்பட்டுள்ள டிடிவி தினகரன் இன்னும் சற்றுநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படவுள்ளார். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னதை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் குற்றப்பிரிவு போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயையும் டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரன் மீது, டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த சனிக்கிழமை முதல் நான்கு நாட்களாக 37 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

ஒரே அறையில் விசாரணை

ஒரே அறையில் விசாரணை

அப்போது சுகேஷும், டிடிவி தினகரனும் ஒருவரை ஒருவர் தெரியாது என கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே அறையில் இருவரிடமும் நேருக்கு நேராக விசாரணை நடத்தப்பட்டது.

நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

இதைத்தொடர்ந்து நள்ளிரவு டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் தினகரனை கைது செய்தனர். டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

ஜாமீன் கோர முடிவு

ஜாமீன் கோர முடிவு

இன்று பிற்பகம் 2 மணி அளவில் தினகரன் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்றும் அந்த சமயத்தில் தினகரனின் வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்

ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்

ஆனால் தினகரன் செல்வாக்கு உடையவர் என்பதால் அவர் சாட்சிகளை கலைக்க என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் டிடிவி தினகரன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

English summary
TTV Dinakaran have been arrested by the Delhi police. He will be appeared in the court today. But its difficult for his to get bail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X