உத்திர பிரதேசத்தில் 53 தொகுதிகளுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
உத்திரபிரதேசத்தில் 4ம் கட்டமாக 53தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி , நடைபெற்று வருகிறது.
லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் 12 மாவட்டங்களில் உள்ள 53தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.
உத்திரபிரதேசத்தில் மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்துவது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
ஏற்கனவே 3 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 12 மாவட்டத்தில் உள்ள 53 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக தேர்தல் நடைப்பெற்றி வருகிறது.

பலத்த பாதுகாப்பு
4ம் கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் ஆணையம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் வன்முறை நிகழாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு்ள்ளனர்.

தனியாக போட்டி
உ.பி-யில் பாஜகவும், பகுஜன் சமாஜ் கட்சியும் தனித் தனியாக களமிறங்கியுள்ளன. பாஜகக்கு உத்திரபிரதேச தேர்தலின் முடிவுகளை வைத்துதான் , அடுத்து வருகிற பாராளுமன்றத் தேர்தலை எப்படி கையாள்வது என்பது தெரியவரும். அதனால் பாஜகவுக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் பகுஜன் சாமாஜ் கட்சியும் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளது.

சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணி
இந்த தேர்தலில் ஆளும் சமாஜ்வாடி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளது. சமாஜ்வாடி கட்சியில் அதிகாரச் சண்டை மேலோங்கி இருப்பதால், அகிலேஷ் யாதவ் எப்படியாவது ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று காங்கிரசுடன் கூட்டணி வைத்து களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாரம்
தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பாஜகக்கு ஆதரவாக 3 இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 6 இடங்களிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார். பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் தீவிர பிரசாரம் செய்தார். சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இருவரும் பல தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டனர். மேலும் ராகுல்காந்தி சகோதரி பிரியங்கா காந்தியும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் 12 மாவட்டங்களில் உள்ள 53தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications