இந்தி பேசாதவர்கள் மீது இந்தி திணிப்பு இல்லை: மத்திய அரசு
இந்தி பேசாதவர்கள் அந்த மொழியை பயன்படுத்தத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: இந்தி மொழி தெரியாதவர்கள் அந்த மொழியை பயன்படுத்த தேவையில்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகளில் மைல்கல்களில் இந்தி மொழியில் எழுதுவது, பாஸ்போர்ட்டில் இந்தி மொழி உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் துளு மற்றும் கொடுவா ஆகிய மொழிகளை இந்திய அரசமைப்பின் 8-ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் காங்கிரஸ் பி.கே.ஹரிபிரசாத் தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார்.
அதற்கு மத்திய இணை அமைச்சரும், அரசு மொழிகள் துறைகளின் பொறுப்பாளருமான கிரண் ரிஜிஜு பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இந்தி என்பது அரசு மொழி, மற்ற இந்திய மொழிகள் தேசிய மொழிகளாகும். மற்ற மொழிகள் மீது இந்தியை திணிப்பதா என்ற கேள்விக்கே இடமில்லை. இந்தி பயன்பாடு குறித்து நாங்கள் ஏற்கெனவே விளக்கம் அளித்து விட்டோம்.
இந்தியை ஊக்குவிக்கவோ, அதன் பயன்பாட்டை அதிகரிக்கவோ மத்திய அரசு சிறப்பு முயற்சிகள் எதையும் செய்யவில்லை. இந்தி ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளதுதான். அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநில மொழிகளை பயன்படுத்துவதில் எந்த தடையும் இல்லை.
மொழி என்பது மிகவும் உணர்ச்சிபூர்வமான விஷயமாகும். தவறான விளக்கத்தின் மூலம் தவறாக வழிநடத்திவிட்டால் நாட்டில் மிகவும் பெரிய கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றார் அவர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications