லண்டன் அடுக்குமாடி தீ விபத்து... குழந்தையை காப்பாற்ற 9-ஆவது மாடியிலிருந்து வீசிய தாய்
லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்தில் சிக்கிய தன் குழந்தையை 9-ஆவது மாடியிலிருந்து பெண் ஒருவர் வீசிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
லண்டன்: லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீவிபத்திலிருந்து தனது குழந்தையை காப்பாற்ற 9-ஆவது மாடியிலிருந்து குழந்தையை பெண் ஒருவர் வீசினார்.
லண்டன் நகரில் 27 அடுக்குகளை கொண்ட குடியிருப்பில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு அங்கும் இங்கும் ஓடினர்.
மேலும் ஜன்னல் வழியாகவும் பலர் சாலையில் செல்வோரை உதவிக்கு அழைத்தனர். எனினும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

12 பேர் பலி
இந்த விபத்தில் 12 பேர் வரை இறந்துள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்தனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மொத்தமுள்ள 27 மாடிகளில் 24 மாடிக்கு மேல் உள்ள 25, 26, 27 ஆகிய மாடிகளில் உள்ளவர்களின் நிலை என்ன என்று தெரியும். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
9-ஆவது மாடியிலிருந்து...
இந்த நிலையில் விபத்தை நேரில் பார்த்த சமீரா லம்ப்ரானி கூறுகையில், தீவிபத்து ஏற்பட்டதும் அந்த கட்டடத்தின் ஜன்னல்களில் இருந்து குழந்தைகள், மக்கள் என உதவிக்கு அழைத்தனர். 9-ஆவது மாடியில் ஜன்னல் ஒன்று பாதி திறந்த நிலையில் இருந்ததை கண்டேன்.

பிடித்து கொள்ளுங்கள்
அப்போது ஒரு பெண், தனது குழந்தையை வீசுகிறேன். யாராவது பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறியபடியே குழந்தையை வீசினார். இதனால் குழந்தைக்கு என்னாவாகுமோ என்று பயம் அடைந்தேன். எனினும் அங்கிருந்த ஒருவர் குழந்தையை பத்திரமாக பிடித்து கொண்டார். இதனால் குழந்தை உயிர்தப்பியது என்றார்.

எலும்பு முறிவு
இந்த விபத்தை நேரில் பார்த்த மற்றொரு பெண் கூறுகையில் ஒரு பெண் 5 அல்லது 6-ஆவது மாடியிலிருந்து தனது 5 வயது மகனை கீழே வீசினார். அந்த குழந்தைக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன் என்றார். குடியிருப்பில் இருந்த சிலர் தங்களிடம் உள்ள பெரிய துணிகளை பாராசூட் போல் செய்து அதன் மூலம் ஜன்னல்களில் இருந்து குதித்தனர். ஆனால் அனைவரும் தப்பினரா என்பது தெரியவில்லை.

4 குழந்தைகள் மட்டுமே
21-ஆவது மாடியில் இருந்து ஒரு பெண் தனது 6 குழந்தைகளுடன் இறங்கினார். ஆனால் அவர் கீழே வரும் போது 4 குழந்தைகள் மட்டுமே இருந்தனர். இதனால் மீதமுள்ள 2 குழந்தைகளின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications