Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊழல் மிகு இந்தியா அல்ல.. திறன் மிகு இந்தியாதான் நம் இலக்கு!- மோடி

Subscribe to Oneindia Tamil

டொரன்டோ: இந்தியா திறன் மிகுந்த நாடு என்பதே நம் இலக்கு... முந்தைய அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட ஊழல் மிகு நாடு என்ற என்ற தோற்றத்தை மாற்றியுள்ளோம், என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கனடாவின் டொரான்டோ நகரில், அங்கு வாழும் இந்தியர்களிடையே மோடி வியாழக்கிழமை உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் பங்கேற்றார். அப்போது மோடி பேசியதாவது:

நம்பகமான சூழல்

நம்பகமான சூழல்

தீவிர உற்சாகத்துடன் அன்பு காட்டிய கனடாவுக்கும் அதன் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நீண்ட காலத்துக்குத் தொடரும். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தியாவில் தற்போது நம்பகமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மனதில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகள்

உள்கட்டமைப்பு வசதிகள்

இந்தியா சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் வளர்ச்சி ஒன்றே தீர்வாகும். தனக்குத் தேவையான அனைத்து திறன்களையும் நம் நாடு பெற்றிருக்கிறது. தற்போது அதற்கு வாய்ப்புகள்தான் தேவை. சாலை மேம்பாடு உள்பட உள்கட்டமைப்பு வசதிகள் மீது எனது அரசு கவனம் செலுத்தி வருகிறது.

சுத்தப்படுத்தும் வேலை

சுத்தப்படுத்தும் வேலை

நாட்டில் குழப்பம் நிறைந்த சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பியவர்கள் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி) அதைச் செய்தனர். அவர்கள் சென்று விட்டனர். அவர்களால் ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலையை சுத்தப்படுத்தும் வேலையை நாம் மேற்கொள்வோம்.

திறன்மிகு இந்தியா

திறன்மிகு இந்தியா

உலக வளர்ச்சிக்குத் தேவையான பணியாளர்களை இந்தியா வழங்கும். "திறன்மிகு இந்தியா' என்பதுதான் நமது இலக்கே தவிர, "ஊழல் மிகுந்த இந்தியா' அல்ல. நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் என்னால் ஏற்படவில்லை. அவை இந்திய மக்களால் ஏற்பட்டு வருகின்றன.

இளைஞர்கள்

இளைஞர்கள்

பத்து மாதங்களுக்கு முன் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய செல்வம் அதன் இளைஞர்கள்தான். அவர்களை வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாகப் பார்க்க விரும்புகிறேன்.

நாட்டில் 80 கோடி இளம் மக்கள்தொகை இருக்கிறது. 80 கோடி கனவுகளும், 160 கோடி வலுவான கரங்களும் இருக்கின்றன. நம்மால் சாதிக்க முடியாதது என்ன?

தூய்மை இந்தியா

தூய்மை இந்தியா

தூய்மை இந்தியா திட்டத்தைப் பொருத்தவரை, இது அரசு மட்டுமே மேற்கொள்ளும் திட்டமல்ல. மக்களும் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக்கும் திட்டங்களோடு முன்வருகிறார்கள். இது, நாட்டு மக்களின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கான அறிகுறியாகும். பள்ளிகளில் குறிப்பாக சிறுமிகளுக்காக கழிப்பறைகளைக் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமைதி - அணு சக்தி

அமைதி - அணு சக்தி

மகாத்மா காந்தியும் கௌதம புத்தரும் வாழ்ந்த நாடான இந்தியாவுக்கு அமைதி, சமாதானம் ஆகியவற்றில் நீண்ட நெடிய வரலாறு உண்டு.

அப்படியிருந்தும் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆக்கப்பூர்வமான மின் உற்பத்திக்கான அணு உலைக் கலன்களை அளிக்க மறுத்தது வருத்தமளித்தது.

புவி வெப்பமயமாதல் குறித்தும் பருவநிலை மாற்றம் குறித்தும் உலகமே கவலைப்படுகிறது. குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து இப்பிரச்னை குறித்து விவாதிக்கிறார்கள்.

யுரேனியம்

யுரேனியம்

ஆனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, தூய்மையான எரிசக்தியை உற்பத்தி செய்வதில் இந்தியா வெற்றி பெற்றால், உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கினர் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னையைத் தீர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர் என்ற நிலை தோன்றும். அதற்கு, அணு மின்சக்தி அவசியம்.

எனது இந்த மூன்று நாடுகள் பயணத்தில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய முடிவாக, அணுசக்தித்துறை தொடர்பாக பிரான்ஸில் எடுக்கப்பட்ட முடிவைக் கூறலாம். இந்தியாவில் அணு உலைகளை அமைப்பது என்று அங்கு முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு யுரேனியம் தேவைப்படுகிறது. அதை கனடா வழங்கும்.

குண்டு தயாரிப்பவர்களை விட்டுட்டாங்க

குண்டு தயாரிப்பவர்களை விட்டுட்டாங்க

கடந்த காலங்களில் அணு உலைகளை வழங்குமாறு பல்வேறு நாடுகளையும் இந்தியா கோரி வந்தது. அந்த நாடுகள் அதை ஏற்காமல் கைவிரித்து விடும்.

இந்தியா அணுகுண்டைத் தயாரித்து விடும் என்று அந்த நாடுகள் அஞ்சின. ஆனால், அணுகுண்டு தயாரிப்பவர்களை யாரும் தடுப்பதில்லை.

இந்தியா - கனடா

இந்தியா - கனடா

நான் குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் இருந்து கனடாவுடன் இணைந்து பணியாற்றுவது நல்ல அனுபவமாக இருந்து வருகிறது.

இந்தியாவும் கனடாவும் இணைந்து பணியாற்றுவது இந்த நாடுகளை பெரும் சக்திகளாக உருவெடுக்கச் செய்யும்," என்றார் மோடி.

முன்னதாக இந்தியாவுக்கு 3,000 டன் யுரேனியத்தை வழங்க கனடா புதன்கிழமை ஒப்புக் கொண்டது. ரஷியா, கஜகஸ்தானைத் தொடர்ந்து இந்தியாவுக்கு யுரேனியத்தை வழங்க உள்ள மூன்றாவது நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+