'கர்நாடகா ஜிஹாதிகள்' பாணியில் வாகனங்களை தாறுமாறாக ஓட்டி லண்டனில் தாக்குதல்!
வாகனங்களை தாறுமாறாக ஓட்டி தீவிரவாதிகள் நடத்தி வரும் இந்த தாக்குதல்கள் கர்நாடக மாநில ஜிஹாதிகள் நடத்தும் தாக்குதல் முறையாகும்.
லண்டன்: வாகனங்கள் மூலம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் பயன்படுத்தும் முறை கர்நாடக மாநில ஜிஹாதி தீவிரவாதி ஒருவரிடம் இருந்து தொடங்கப்பட்டது.
லண்டன் நகரின் மத்திய பகுதியில் பாலம் ஒன்றில் நேற்று இரவு பாதசாரிகளை குறிவைத்து வாகனம் ஒன்று தாறுமாறாக பலமுறை மோதியது. இதில் பாதசாரிகள் பலரும் தூக்கி வீசப்பட்டனர்.
அதேசமயம், இன்னொரு பகுதியில் வேனிலிருந்து பாய்ந்த மர்ம நபர்கள் கத்தி, ஆயுதங்களைக் கொண்டு கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கினர். மொத்தம் 3 இடங்களில் அதாவது லண்டன் பாலம், பாரோ மார்க்கெட், வாக்ஸ்ஹால் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர்.

6 பேர் பலி
இந்த 3 சம்பவங்களிலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது தீவிரவாதத் தாக்குதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட 2 தீவிரவாதிகளை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

வாகனங்களே ஆயுதம்
ஐஎஸ் தீவிரவாதவாதிகள் தங்கள் தாக்குதலுக்கு பெரும்பாலும் பயன்படுத்துவது வாகனங்களே ஆகும். பிரான்ஸ் தாக்குதலாக இருக்கட்டும், ஜெர்மனியில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும்., தற்போது லண்டனில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும் தீவிரவாதிகளின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆயுதம் வாகனங்களாகும். வாகனங்களை கொண்டே படுகொலைகளை செய்ய வேண்டும் என்று கடந்த 2014-ஆம் ஆண்டு ஐ.எஸ், அல்கொய்தா ஆகிய தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்த முறையையே பயன்படுத்தினர்.

வழக்கமான பாணி
வாகனங்களை தாறுமாறாக ஓட்டி தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள் நடத்திய தாக்குதலில் வாகனங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. கடந்த 2007-ஆம் ஆண்டு ஸ்காட்லாண்டில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த காரை தாறுமாறாக ஓட்டி தாக்குதல் நடத்திய பெங்களூரை சேர்ந்த கஃபீல் அகமதுவும் இதே முறையை தான் கையாண்டார்.

விசாரணையில் அதிர்ச்சி
இதுதொடர்பாக கர்நாடக போலீஸார் நடத்திய விசாரணையில் பிரபல சுற்றுலா தலமான கோவாவில் வேனில் வெடிபொருள்களுடன் தாக்குதல் நடத்த கஃபீல் அகமது திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவங்களில் இருந்து நன்றாக தெரிவது என்னவென்றால் தீவிரவாதிகள் யாரும் தற்போது ஆயுதங்களையோ வெடிபொருள்களையோ பயன்படுத்துவதில்லை. மிகவும் எளிமையாக கிடைக்கக் கூடிய அதே சமயம் உயிழப்புகளை அதிகம் ஏற்படுத்தக் கூடிய வாகனங்களை பயன்படுத்துவதையே அவர்கள் விரும்புகின்றனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications